செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களும் குடியிருப்பும்

ஏற்கனவே சாலியர்கள் புத்தூரில் குடியிருந்ததாக பார்த்தோம் அல்லவா....

அதுதான் தென் பகுதியில் நமது முதல் குடியிருப்பு. எனவே தான் ஏழூர் சாலியர்களின் குலதெய்வக் கோயில்கள் பெரும்பாலும் புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருக்கிறது. உதாரணமாக 1. கலுசலிங்க அய்யனார் கோவில் 2. தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் 3. பாவோடி புணுகு கருப்பசாமி கோவில் போன்றவற்றை சொல்லலாம். புத்தூரில் இருக்கும் குளத்துக்கு இன்றும் பெரிய சாலியன் குளமென்றே பெயர். சின்ன சாலியன் குளம் புனல்வேலியில் இருக்கிறது.

புத்தூரில் வேகமான இனத்தவரால் இடைஞ்சலுக்கு ஆளான நாம் சத்திரப்பட்டி அருகில் இருக்கும் எஸ்.ராமலிங்கபுரம் என்ற இடத்தில் குடியேறினோம். அதற்கு சாட்சியாக நூல் நனைக்கும் தொட்டி மிகச்சில காலம் வரை இருந்தது. இப்போது போன இடம் தெரியவில்லை. இது போக ஒரு பிள்ளையார் கோவில் (இங்கேயும்!!) சாலியர்களால் உருவாக்கப்பட்டது என்ற கல்வெட்டுடன் இருந்தது. இப்போது கோவில் இருக்கிறது. ஆனால் கல்வெட்டு இருக்கிறதா என தெரியவில்லை.

பிறகு அங்கிருந்தும் இடப்பற்றாக்குறை மற்றும் வேறு இடைஞ்சலினாலும் விரட்டப் பட்டோம்.

பிறகு சிவகிரி ஜமீன்தாரிடம் தானமாக இடம் கேட்டோம். அதே நேரம் இன்னொரு தாழ்த்தப்பட்ட இனத்தவரும் நம் அருகில் இடம் கேட்டனர் (இனப் பெயர் தெரியும். சொல்ல விரும்பவில்லை)

நமக்கு இப்போது இருக்கும் சமுசிகாபுரம் , சத்திரப்பட்டி பகுதிகள் ஒதுக்கப்பட்டது. உடன் கேட்டவர்களிடம் "இவர்கள் கலாச்சாரத்துக்கும் உங்களுக்கும் சரிவராது. இவர்கள் நடவடிக்கைகள் ஐயர் போல இருக்கிறது. எனவே வேறு இடம் தருகிறோம்" என்று சொல்லி இன்னொரு கிராமம் ஒதுக்கப்பட்டது.

சத்திரப்பட்டி இருக்குமிடம் கருவேலங்காடாக இருந்தது. நாம் தான் சுத்தப்படுத்தி குடியேறினோம். நம் தொழிலைப் பொறுத்த வரை பெரிய தெருக்கள் தான் தேவை (பாவு தோய).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar