செவ்வாய், 29 நவம்பர், 2016

மாயவரம் சாலியர் திருமணம் 1

மாயவரம் சாலியர்களில் பெண், மாப்பிள்ளை ஜாதகங்களை பெற்றோர் வாங்கி பொருத்தம் பார்த்து சரியாக அமைந்தால் , மாப்பிள்ளை வீட்டிலிருந்து சுமார் 25 பேர்களுக்கு குறையாமல் ஆண்களும் பெண்களும் சர்க்கரை, பூ, பழம் , வெற்றிலை பாக்கு, குங்குமத்துடன் பெண்ணுக்குப் போடும் நகை முதலியவைகளை தாம்பாளத்தில் வைத்து எடுத்து சென்று நிச்சயம் செய்வார்கள். இதற்கு வெற்றிலை பாக்கு மாற்றுவது அல்லது பெண்ணுக்கு பொட்டுப் போடுவது என்றும் அழைப்பார்கள்.

திருமணத்துக்கு நல்ல நாள் பார்த்து முகூர்த்த ஓலை எழுதுவது, தாலி செய்யக் கொடுப்பது, பந்தக்கால் நடுவது என்று வேலை நடக்கும். தாலி, புடவை, பரிசப்புடவை எல்லாம் மாப்பிள்ளை வீட்டைச் சார்ந்தது. கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்து வந்து பரிசம் போடும் சடங்கு நடக்கும். ஒரு தாம்பாளத்தில் மூன்று தேங்காய், ஒரு சீப்பு வாழைப்பழங்கள், வெற்றிலை பாக்கு , பூ, ஒரு மஞ்சள் துணியில் 21 கால் ரூபாய் நாணயங்களை முடிந்து வைத்திருப்பார்கள். பெண்ணின் தாய் மாமன் பெண்ணின் நெற்றியில் சந்தனத்தால் பொட்டுவைத்து , மாலை போட்டு தேங்காய் பழம் உள்ள தட்டை எடுத்து பெண்ணிடம் கொடுப்பார். இதற்கு "பரிசம் போடுவது" என்று பெயர் அங்கு.

கல்யாண நாளன்று அரசாணி கால் நடுதல், தாலி, கூறைப்புடவை, கூறைவேட்டி எல்லாம் வைத்துப் படைப்பார்கள். புரோகிதர் வந்து சடங்குகள் ஆரம்பமாகும். விருந்து ஆரம்பமாகும். மாப்பிள்ளை காசி யாத்திரை போவது என்ற சடங்கு நடக்கும். பிராமணர்கள் இதைச் செய்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதிலிருந்து நாமும் #பிராமணரே என்பதை அறியலாம்.

காசியாத்திரை என்பது, மாப்பிள்ளை காசிக்கு கிளம்புவார்.



பெண்ணின் தகப்பனார், மாப்பிள்ளையை அழைத்து, நான் பெண் தருகிறேன். என்று சொல்லி அழைத்து வந்து மாப்பிள்ளையிடம் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுப்பார். மாப்பிள்ளைக்கு மோதிரம் போடுவார். புரோகிதர் மாப்பிள்ளைக்கு கூறைவேஷ்டியை கொடுப்பார்.

அடுத்து பெண்ணுக்கு மாப்பிள்ளையின் சகோதரி பூ சுற்றுவது என்ற சடங்கை நடத்துவார். தாம்பாளத்தில் பழம், மூன்று தேங்காய், பூ, தாம்பூலம் எல்லாம் வைத்து பெண்ணின் நெற்றியில் சந்தனத்தால் பொட்டிட்டு, குங்குமம் வைத்து பூமாலை கழுத்தில் போட்டு பழத்தட்டை பெண்ணிடம் தருவார். .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar