செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியரும் ஆலயத்திருப்பணியும் 1

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கென அவ்வூர் சாலியர்கள் ஒரு தோப்பை எழுதி வைத்துள்ளனர். இன்றளவும் ஆண்டாள் கோவிலுக்கு எழுதிவைக்கப்பட்ட சொத்துகளிலேயே இது தான் பெரியது என்று சொல்லப்படுகிறது. இன்றும் "சாலியன் தோப்பு" என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் மடவார் வளாகம் என்ற சிவஸ்தலத்துக்கு எதிரில் சாலியர்கள் ஒரு பெரிய தெப்பக்குளம் அமைத்து, அதன் நடுவில் 12 கல் கொண்ட மண்டபம் கட்டியுள்ளனர். சில ஆண்டுகள் முன்பு அது தூர்வாரப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.


தை மாதம் இரண்டாம் தேதி ஆண்டாள் திருக்கல்யாணத்துக்காக புடவை சாலியர்களால் கொடுக்கப்படுகிறது. (ஸ்ரீ ஆண்டாள் நம் வீட்டுப்பெண் என்பது பலருக்கு தெரிந்திருக்கும்)

நவராத்திரி திருவிழாவுக்காக சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு முளைப்பாரி வைத்து , அம்பு விடும் திருவிழா சுந்தரபாண்டியபுரம் சாலியர்களால் நடத்தப்படுகிறது.

ராஜபாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழித் திருவிழா கொடியேற்றம் சாலியர்களால் நடத்தப்படும். கொடிக்கான கயிறு கொடுப்பதும் நாமே.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்துக்கு , கொடி ஏற்றத்துக்காக 40 கஜமுள்ள ஒரே புடவை நெய்யப்பட்டு மணமேடு சாலியர்களால் (இவர்களைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டியதுள்ளது. #சொல்லலாமா ?) கொடுக்கப்படுகிறது. இவ்வுற்சவத்தின் 4ஆம் நாள் திருவிழா சாலியர் மண்டகப்படியாக நடத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar