வியாழன், 3 நவம்பர், 2016

தெரிய வேண்டிய விஷயங்கள் 2



#பாஷை

நாம் வடக்கில் நிறைந்து வாழ்ந்தவர்கள். உத்திரப் பிரதேசம், பீகார், பஞ்சாப் போன்ற இடங்களில். அப்படியானால் நமது தாய் பாஷை ஹிந்தியா ? அல்லது பஞ்சாபியா ?

பிறகு குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ர பகுதிகளில் குடியேறினோம். அப்படியானால் நமது பாஷை குஜராத்தி அல்லது சௌராஷ்ட்டிரமா ?
நிற்க. சௌராஷ்ட்ர இனத்தில் இப்போதும் #சாலிய_மஹரிஷி கோத்திரம் உண்டு.

பிறகு தென்னிந்தியாவில் குடியேறினோம். அங்குள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் போன்றவற்றை கற்றுக் கொண்டோம்.

சரி, பிறகு எதைத்தான் நமது தாய்மொழியாக ஏற்பது.

இருக்கிறது. பல மொழிகளில் பேசுபவராக இருப்பினும், நாம் கடைசியாக தாய்மொழியாக கொண்டது #தெலுங்கு தான். (நினைவிருக்கிறதா ? பத்மாவதி தாயார் பற்றிய நமது பதிவு)

நான் விசாரித்து தெரிந்து கொண்ட வகையில் எல்லோருமே ஒரே கருத்தாக தெரிவிப்பது நான் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதே.

இன்னொரு மூத்த அறிஞர் ஒருவர் சொல்லும் போது "பூணூலும், தெலுங்கும் சாலியருக்கு எப்பொழுதும் சாஸ்வதமானது" என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பெரிய அறிஞரும் கூட.

#பின்குறிப்பு:- தமிழுணர்வாளர்கள் என்னை மன்னிக்கவும். எனக்கும் தெலுங்கு தெரியாது. தாய்மொழி தமிழ்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar