செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியரும் ஆலயத்திருப்பணியும் 2

கேரள மாநிலம் பலராமபுரம் சாலியர்கள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு தேவையான துணிமணிகள், கொடியேற்றத்துக்கான கொடிக்கயிறு கொடுக்கிறார்கள். இங்கு லட்சதீபம் ஏற்ற திரி கொடுப்பதும் நாமே...

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சிக்கும், சுசீந்திரம் ஸ்தாணுமாலைய ஸ்வாமி கோவிலுக்கு கொடியேற்ற பட்டாடை கொடுப்பதும் கோட்டார் பட்டசாலியர்களே( பட்டாரியர்).

கன்னியாகுமரி மாவட்ட ஆழ்வார் கோயில் திருவிழாவில் கொடியேற்றத்துக்கான கொடியாடை இரணியல் பட்டசாலியர்கள் கொடுக்கிறார்கள்.

மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயத்துக்கு அபிஷேக சந்தனம் நிரம்பிய குடத்தை யானைமேல் ஏற்றி மேளதாளத்துடன் கொண்டுபோய் கொடுப்பவர்கள் இரணியல் பன்னிக்கோடு ஊரில் வாழும் பட்டசாலியர்களே.



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவில் 8
மண்டகப்படி பட்டசாலியர்கள் பொறுப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar