செவ்வாய், 29 நவம்பர், 2016

மணமேடு சாலியரும் , ஏழூர் சாலியரும்

எந்த ஒரு கோத்திர சம்ஸ்காரமுள்ள இனத்திலும் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுடன் திருமண உறவு கொள்வதில்லை. ஏனெனில் ஒரே கோத்திரத்தார் அனைவரும் சகோதர முறை உள்ளவர்களே.

வட மாநிலங்களில் இருந்து, காஞ்சிபுரத்தில் இருந்த வரை நமக்குள்ளும் நிறைய கோத்திரங்கள் இருந்தது.

பிறகு காஞ்சியிலிருந்து பிரிந்து வந்த நாம் பல்வேறு இடங்களில் குடியிருந்தோம். அதில் மணமேடு, மாயவரத்தில் உள்ள கூரை நாடும் அடங்கும்.

இன்றளவும் மணமேட்டில் குடியிருக்கும் சாலியர்கள் வெவ்வேறு கோத்திரங்கள் கொண்டவர்கள் தான். உதாரணமாக விஸ்வாமித்ரா கோத்திரம், வசிஷ்ட கோத்திரம் , காஷ்யப கோத்திரம் போன்றவை. எனவே பத்ம சாலியர்களின் 101 கோத்திரங்களுடன் இவர்களுக்கு திருமண உறவு உண்டு.

நாம் இங்கு ஏழூரில் குடியேறிய சில காலங்களில் பூணூலை விட்ட பிறகு கோத்திரங்களையும் விட்டோம். சாலிய மஹரிஷி கோத்திரம் நிலைத்து விட்டது. ஒரே கோத்திரத்தார் திருமணம் செய்யக்கூடாதல்லவா ? எனவே ஒரே குலதெய்வம் கொண்டவர்கள் திருமணம் செய்வதில்லை என்று மாற்றப்பட்டது.



எனவே ஏழூர் சாலியர்களுக்கும் மற்றைய சாலியர்களுக்கும் திருமண சம்பந்தம் இல்லை (நாகர்கோவில் தவிர்த்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar