வியாழன், 10 நவம்பர், 2016

சோழர்கால சாலியர்கள்





சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள செப்பேடுகளில் முதல் 10 வரிகள் சமஸ்கிருதத்தில், அடுத்த 110 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட விஷயம் :-

கச்சிப்பேடு (காஞ்சிபுரம்) நகரின் சில பகுதிகளான கருவூலம்பாடி, கம்சகப்பாடி, ஆதிமனப்பாடி, எருவேலச்சேரி போன்ற இடங்களில் வாழும் பட்டசாலிய நெசவாளர்கள் 200 தங்க காசுகளை அரசிடம் வைப்பு நிதியாக வைத்துள்ளனர். இதில் இரண்டு பகுதி நெசவாளர்களை உத்தமசோழன் கோவில் மேலாளர்களாக நியமித்திருந்தார்.

ராஜராஜன் காலத்தில் தஞ்சை உள்ளாலை, புறம்பாடி என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தது. கோட்டையின் உள்ப்பகுதி உள்ளாலை எனவும் வெளிப்பகுதி புறம்பாடி எனவும் அழைக்கப்படும். உள்ளாலைப் பகுதியில் சாலியத்தெரு என்று இருந்தது. என்றால் மன்னரிடம் நமக்கிருந்த மதிப்பு புலனாகும்.

சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக்காலத்தில் நிலவரி, சுங்கவரி போல நெசவுத்தொழில் சம்பந்தப்பட்ட வரிகளும் இருந்தது.

நூலுக்கு சாயமிடும் சாலியக்குடியினர் அத்தோழில் செய்வதற்கு கட்டப்படும் வரி "சாலியக்காணம்" அல்லது "சாலியத்தறி" என்று வழங்கப்படும்.

தறி நெய்யும் சாலியரிடம் தறிக்கு இவ்வளவு காசு என்று வரி விதிக்கப்பட்டது. அவ்வரிக்கு "தறிக்கடமை" எனப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar