செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களும் குலதெய்வங்களும் 3

(கீழ்கண்ட பதிவு நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே. மற்றவர்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். கிண்டலான பின்னூட்டங்கள் வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் )
சாலியர்கள் வழிபட்ட விநாயகர் பற்றி பேசினோமல்லவா... அதன் கூடுதல் விபரம்.

நிற்க...இதே சம்பவம் மாயவரம் சாலியர்களிடத்திலும் சொல்லப் படுகிறது. ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை. நாம் இப்போது படிக்கப் போகும் விஷயம் அப்படி அல்ல.

காஞ்சிபுரம் நகரில் மிலேச்ச (வேற்று மத) அரசனின் தொந்தரவு தாங்காமல் நாம் இங்கே ஓடிவந்தோமல்லவா..அப்போது நாம் வழிபட்ட விநாயகரை விட்டு விட்டே வர யத்தனித்தோம். அச்சமயம் விநாயகர் தாமும் உடன் வர விரும்பியதாக உணர்த்தினார். (அதாவது அசரீரி அல்லது மருளாடி சொல்லியிருக்கக் கூடும்)

தாங்களே இடைஞ்சலில் தப்பித்து ஓடுவதாகவும், இதில் விநாயகரை தூக்கிக் கொண்டு போக இயலாது எனவும் நம் முன்னோர்கள் தெரிவிக்க...
விநாயகர் "நான் உங்களுக்கு சிரமம் இல்லாமல் எடை குறைவான, நீங்கள் அன்றாடம் புழங்கும் பஞ்சு போல இருப்பேன். என்னைக் கொண்டு போங்க. நீங்கள் பிழைப்பதற்கு சரியான இடம் என்று நான் நினைக்கும் இடத்தில் பாரமாகி விடுவேன்" என்றார்.


அதன்படி அவர் எடை குறைந்து மாற, விநாயகரையும் தூக்கிக் கொண்டு நாம் புறப்பட்டோம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தென் மாவட்டங்களை நோக்கி வர ஆரம்பித்தோம். ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகில் வரவும், விநாயகப் பெருமான் எடை பாரமாகி மாறினார். இதுதான் நமது இடம் என உணர்ந்த சாலியர்கள் அங்கேயே அவரை நிறுவி விட்டு அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழத் துவங்கினார்கள்.

பிறகான ஆதிக்க இனங்களினால் அங்கு தொந்தரவுக்கு ஆளான நம் மக்கள் தற்போது ஸ்வில்லிபுத்தூரின் ஐந்து பட்டிகளிலும், தெற்கே ராஜபாளையம், புத்தூர் (இது பற்றி பிறகு பார்ப்போம்) புனல்வேலி, முகவூர், புத்தூரிலிருந்து விரட்டப் பட்ட பிறகு எஸ். ராமலிங்காபுரம் (சத்திரப்பட்டி, சமுசிகாபுரம்) அப்போது கிடையாது. (இது பற்றி பிறகு பேசுவோம்) போன்ற இடங்களில் குடியேறினோம்.

இது ஒரு புறம் இருக்க அந்த விநாயகரை பற்றி அறிந்த பிறகு நான் சொன்னவரிடம் விசாரிக்க, "எனக்கும் இருக்குமிடம் தெரியாது. நீதான் தேடிக் கண்டுபிடி " என்று விட்டார். பிறகு 3 வருஷ விசாரணைக்கு பின்னர் எனக்கு அவர் காட்சி கொடுத்தார் (அதாவது கண்டுபிடித்தேன்). இப்போதும் இருக்கிறார்.

இந்த விநாயகர், நம் குலக் கொழுந்து ஆண்டாள், இந்த விநாயகருக்கும், ஆண்டாள் கோவிலுக்குமான தொடர்பு, ஆண்டாளுக்கும் நமக்குமான உறவு விநாயகர் கோவில் இருக்கும் இடம்பற்றியும் சில ஆதாரப்பூர்வமான தகவல்கள் பற்றியும் தொடர்ந்து பேசுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar