ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சாலியர்களின் பட்டம்

முன்குறிப்பு :- நாம் பிராமணர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டு படியுங்கள்.




நண்பர்களே...நமது இனத்தின் வேர்கள் எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டியது உள்ளது. சொன்னால் கோவிச்சிக்கக் கூடாது.

நமது இனத்தவர்கள் சில பட்டங்களை கொண்டு அழைக்கப்படுகிறார்கள். நம்மில் பலரும் அதை விரும்புகிறோம் - கேவலம் என்று புரியாமலேயே..

மூப்பனார் :- மூப்பர் என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு முதியோர், மூத்தவர், காரணவர் என்ற அர்த்தத்தால் சொல்லப்படும். நமது இனம் இங்கே குடிபெயர்ந்து வந்த போது அந்தக் குழுவின் மூத்த குடி ஆள் மூப்பர் என அழைக்கப்பட்டார். பிறகு அதையே மரியாதையாக மூப்பனார் என மாறியது.

இயல்பாகவே நமக்கு ( சாலியருக்கு ) மூப்பனார் என்ற பட்டம் இருந்ததே இல்லை.
வேறு பட்டங்கள் இருந்தது. இருக்கிறது.

பண்ணாடி :- இதை நாம் சொல்லவே கூடாது. மற்றவர்கள் சொல்ல அனுமதிக்கவும் கூடாது. இது பெரும்பாலான முதலாளி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய பண்ணை நிலங்கள் வைத்திருந்தவர்கள் பண்ணாடி என்று அழைக்கப்பட்டனர்.
அது நமக்குப் பெருமை அல்ல. முன்குறிப்பை மறுபடி ஒருமுறை படிக்கவும்.

சரி.... அப்படியானால் நமக்கான பட்டம்தான் என்ன ?
பெரிய புராணத்தில் நமக்கு "அறுவையர்" என்ற தொழில்சார்ந்த பட்டம் இருக்கிறது. என்றால் துணியை நெய்து அறுப்பது. "அடவியார்" என்றும் ஒரு பட்டம் உள்ளது. ஆந்திராவில் பத்ம பிராமணர்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. மூப்பனார், பண்ணாடி என்பது நமக்கு பெருமை அல்ல. சொல்லப்போனால் பண்ணாடி என்பது நமக்கு சிறுமைதான்.

வியாழன், 19 ஜனவரி, 2017

சாலிய மஹரிஷி

Print எடுத்து சாலிய மஹரிஷி படத்தை கோவிலில் மாட்டும் அளவுக்கு தரலாமா என்று சில நண்பர்கள் இன்பாக்ஸ் இல் கேட்டார்கள். என் போட்டோஷாப் நண்பர் ஒருவரிடம் கேட்டு , அவர் இப்படி கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் சரிவருமான்னு பாருங்க.

முதுமொழியில் நெசவு

செய்யும் தொழிலை சீர்தூக்கி பார்க்கும்கால் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை.


சாலியரும் பாரம்பரிய மீட்பும்


(கீழ்கண்ட பதிவு நமது பாரம்பரிய கலாச்சார பழக்கங்களையும், நமது பெருமையும் மதிப்பவர்களுக்கு. சாலியர் என்பதில் பெருமிதம் கொள்ளும் நண்பர்களுக்கானது. மற்றவர்கள் இதைப் படிக்காமல் கடந்து சென்று விடுங்கள்)

நமது பழங்கால கலாச்சாரத்தையும், நாம் ரிஷி குலத்தில் வந்தவர்கள் என்பதயும் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள ஒருவழி இருக்கிறது. அதுதான் பூணூல் அணிவது.

ஆம்!!!

நமது உணர்வுகளை வலுவாக்க அதுதான் சிறந்த வழியாக இருக்கும். நிற்க...

இது துவங்கி ஒருசில விளக்கங்கள்.

பூணூல் அணிவது உபநயனம் என்ற பெயரில் நமது இனத்தில் நடத்தப்பட்டு வந்ததது. இப்போதும் சில ஊர்களில் (மாயவரம், மணமேடு, வடசேரி) நடைபெற்று வருகிறது.

நமது ஏழூர் சாலியர் வகைகளில் இப்பழக்கம் கைவிடப்பட்டு குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஆயிற்று.

இது சம்பந்தமான சிந்தனை எனக்கு வரத்துவங்கிய கட்டங்களில் பல சாஸ்திர விற்பன்னர்களை அணுகினேன்.
ஒரு சமயம் ப்ரும்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சொல்லும்போது "ஒரு குடும்பத்தில் உபநயனம் வழி வழியாக நடத்தப்பட வேண்டியது. ஒருவேளை தகப்பனுக்கு அந்தச் செயல் விடுபட்டு விட்டால் அவனுடைய மகனுக்கு இல்லை என்பதல்ல. (தகப்பனே காயத்திரி போன்ற மந்திர உபதேசம் செய்து, பூணூல் அணிவிக்கவேண்டும். எனவேதான் இப்படி சொல்கிறார்) குருவே எல்லாமாக இருந்து அவனுக்கு பூணூல் அணிவிக்க வேண்டும். அவனுக்கான அணியும் உரிமை எப்போதும் மறுக்கப் படக் கூடாது" என்று குறிப்பிட்டார்.

விஷயத்துக்கு வருவோம்...

நாம் மூன்று தலைமுறையாக பூணூல் அணியவில்லை. அதற்காக நமது உரிமை போய்விட்டதென்பதல்ல. நாம் அணியலாம். அணிந்துகொள்ள வேண்டும்.

நமது இனத்தவர் வாழும் ஊர்களில் நிறைய நண்பர்கள் அணிய விரும்பினால் சமஷ்டி உபநயனமாக (நிறைய பேர்களுக்கு ஒரே நேரத்தில் அணிவது) செய்யலாம். ஒரு பொது இடத்தில் நடத்த வேண்டும். இப்படியான ஒரு ஏற்பாட்டை செய்வதானால் நான்கூட என்னால் முடிந்த ஆலோசனை உதவி செய்யலாம். (உன் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்கிறீர்களா.... ஓக்கே :D )

பூணூல் சம்பந்தமாக சில பொது விதிமுறைகள் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. அதை பிறகு சந்தர்ப்பம் வாய்த்தால் பார்ப்போம்.

வாருங்கள் நண்பர்களே. நமது பாரம்பரியத்தை மீட்டேடுப்போம்!

இழந்த பெருமையை மீட்போம்!!

சாலியராய் இணைவோம்!!!

கண்ணூர் சாலியர்



கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யன்னூரில் இருக்கும் அஷ்ட்டமச்சல் பகவதி அம்மன் கோவிலில் உலகப் புகழ்பெற்ற மீனமிருத்து திருவிழா கேரள சாலியர்களால் நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவின் தெய்யம் நடனம் கேரள பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாகும்.

என்றும் சாலியருடன் பத்மாவதித்தாயார்



சுமார் 500 வருஷங்களுக்கு முன்பு பத்மசாலியர் மற்றும் பட்டுசாலியரிடம் ஒரு விஷயத்தில் குழப்பமும் விவாதமும் ஏற்பட்டது. அதாவது இரண்டு சாலியருமே பத்மாவதித் தாயார் தங்களது ஜாதி என்று உரிமை கொண்டாடினர்.

இவ்விஷயமாக முடிவு காண்பதற்கு தாலப்பாக்கம் (அன்னமாச்சாரியார் பிறந்த ஊர்) சின்ன திருவேங்கடநாத குருவிடம் சென்று இதற்கு ஒரு முடிவை வேண்டினர். அப்போது ஸ்ரீ பத்மாவதித்தாயார் பிரத்யக்ஷமாக எழுந்தருளி "நான் பத்மசாலியர் இனத்தவர்" என்று கூறி "பத்மசாலியர் கொடுக்கும் மரியாதையையே முதன்மையாக ஏற்பேன்" என்று கூறினார். இந்தத் தீர்ப்பு அக்டோபர் 23, 1541 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விஷயம் பத்மாவதி தாயார் ஆலயத்தில் உள்ள செப்புத்தகட்டில் இன்றும் இருக்கிறது.

சாலியர் என்பதில் பெருமை கொள்ளுங்கள் உறவுகளே

தறி நெசவின் முழு விபரம்

தறியின்பாகங்கள்

1. விழுது
2. அச்சு
3. நாடா அல்லது ஓடம்
4. அடிமரம்
5. துணியை சுற்றும் கட்டை (ரோலர் கட்டை)
6. கால் மிதி பலகைகள்
7. பாவு நூல்
8. ஊடை நூல்
9. நாடா ஓடும் பலகை அதாவது தண்டவாளம்.



இவை மாத்திரமல்ல. வேறு பாகங்களும் உண்டு. ஆனால் இவையே முக்கிய பாகங்கள்.

விழுது:- இது மெல்லிய பாலீஸ் செய்யப்பட்ட கயிறு அல்லது ட்வைன் ஆகும். கீழே இருக்கும் படத்தில் HEDDLES என்ற பாகம். இதன் மத்தியில் கண் போன்ற துளைகள் காணப்படும். பாவின் நூல் இதன் வழியாக முதலில் வரும். அதன் பின் அச்சுக்கு வரும். விழுதானது பண் என்று அழைக்கப்படும். பண் என்ற தமிழ் வேர்ச் சொல்லுக்கு இசையின் காட்ட பயன்படும் வார்த்தையாகும். இங்கு துணியின் வகையை வேறு படுத்தி இப்பெயர். மேலும் மேலிருந்து கீழாக விழுவது போல இருப்பதாலும் இப்பெயர். மேலும் வேதமென்ற சொல்லுக்கும் பண் என்ற மொழிபெயர்ப்பு உண்டு. துணியின் அகலம், அடர்த்தி (நெருக்கம்) இவைகளின் தேவையைப் பொறுத்து இருக்கும்.



அச்சு:- அச்சானது இரும்பு கம்பிகளால் ஆனது. பட்டை வடிவ கம்பியை வரிசையில் வைத்தது போல இருக்கும். கீழ்கண்ட படத்தில் REED என்ற பாகம். இதுவும் விழுது போல துணியின் அடர்த்திக்கேற்ப அமையும். விழுதில் இருந்து வரும் பாவு நூல் அச்சின் வழியாக வரும். அச்சு கைபிடிக்கும் மரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்தக் கை மரமே தறியின் முக்கியமான பாகமாக நினைக்கப் படுவதால், இதுவே சில இடங்களில் தறி என்று அழைக்கப்படும். அச்சானது ஊடை நூலை நெருக்குவதற்கும்(கையால் இழுத்து சேர்க்கப்படும்), துணியின் தரத்தை நிர்ணயிக்கவும் பயன்படும்.



அடிமரம்:- அச்சு மாட்டப்பட்ட கைமரமே அடிமரம். அதாவது அடிப்படை மரம். எனவேதான் இது தறி என்றழைக்கப்படும். அடிமரத்தை அசைக்கும் போது பாவு நூலானது ஒரு இழை விட்டு ,ஒரு இழையாக இரண்டு பாகங்களாகப் பிரியும். இந்தப் பிரிவுக்கு நடுவில் தான் ஊடை நூலை ஓடம் அதாவது நாடா இழுத்துச் செல்லும். அந்த நூல் முன்பு சொன்னது போல நெருக்கப் படும்.


தறியின் முழு விபரம் 2

காலுக்கு இரண்டு மிதி பலகைகள் இருக்கும். ஒன்றை மிதிக்கையில் முன் சொல்லப் பட்ட படி ஒரு விழுதின் கண்ணில் இணைக்கப்பட்ட பாதி பகுதி நூலானது கீழிறங்கி இன்னொரு பகுதி மேலே ஏறும். இந்த இடைவெளியில் ஒரு முனையிலிருந்து, நாடாவின் வழியாக ஊடை நூல் குறுக்காகப் பயணப்பட்டு அடுத்த முனைக்கு செல்லும். நாடாவில் கிடைமட்டமாக ஒரு ஊசி போன்ற கம்பி இருக்கும். அந்தக் கம்பியில், ஒரு சிறிய குழலில் சுற்றப்பட்ட நூல் இருக்கும். இந்த குழலோடு சேர்ந்த நூலானது தார் எனப்படும். சில இடங்களில் "கண்டு"என்றும் சொல்லப்படும்.

ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நாடா பயணிக்கும் மரமானது தண்டவாளம் எனப்படும். ஓரத்துக்கு சென்ற நாடா ஒரு பெட்டி மாதிரியான அமைப்பில் சென்று சேரும். அந்தப் பெட்டிக்கு பெட்டிப் பலகை என்று பெயர். இருபுறமும் இருக்கும். பெட்டிப்பலகையில் சேர்ந்த நாடா கை உருளையில் கட்டப்பட்ட கயிற்றினால் இழுக்கப்பட்டு அடுத்த முனைக்கு செல்லும். இதற்கு முன்பே மிதி பலகையின் அடுத்த கால் மிதிக்கப்பட்டு முன் சொன்னபடி நாடா செல்லுமளவு இரண்டு பாகம் பிரிந்த இடைவெளி ஏற்பட்டிருக்கும். இங்கே இரண்டு பாகங்களாக நூல் விழுது மூலம் பிரியும் அமைப்புக்கு "புணி என்று பெயர். இரண்டு புணிகள் மேலொன்றும் கீழொன்றுமாக மாற்றி மாற்றி ஏறி இறங்கும். அப்போது தான் ஊடை நூல் பின்னியதைப் போல இருக்கும்.

இடப்புறமும் வலப்புறமும் சென்ற நாடாவில் இருக்கும் நூல் கைப்பிடியால் இழுக்கப்பட்டு அச்சின் மூலம் நெருக்கப்படும்.

மிதிபலகையும்_புணியும் :-

மிதி பலகைகளை மாற்றி மாற்றி மிதிக்கையில் புணிமேலும் கீழுமாக ஏறி இறங்க விழுதுக்கும் மிதி பலகைக்கும் இடையில் ஒரு உருளை போன்ற சக்கரத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும். உதாரணமாக கிணற்றில் நீர் இறைப்பதற்கு ஒரு உருளை பயன்படும் அல்லவா ? அதே அமைப்புதான். அதாவது கயிற்றின் முனையை கையிலிருந்து தளர்த்தும் போது வாளியின் பாரத்தால் உருளை சுழன்று வாளி கிணற்றுக்குள் இறங்கும். நீர் நிரம்பிய உடன் கையில் இருந்த கயிறு இழுக்கப் படும். அப்போது உருளை சுழன்று வாளி மேலே வரும்.

இதே அமைப்புதான். உருளையில் சுற்றப்பட்ட கயிற்றின் புணிகளை ஒரு புணியை வாளி முனையாகவும், இன்னொரு புணியை கயிற்றின் கையிருக்கும் முனையாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

நாடாவின் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ஊடை நூல் (ஊடால (கிராமத்து பாஷை) அதாவது இடையில் செல்வதால் ஊடை நூல்)
நெருக்கப்பட்டு துணியாக வளரும். வளர்ந்த துணி ,
துணியை சுற்றும் கட்டையில் (ரோலர்க் கட்டை) சுற்றப்படும். குறிப்பிட்ட கஸங்களில் அல்லது மீட்டர்களில் மையினால் அடையாளம் இட்ட குறி இருக்கும் இடம் வந்ததும் துணி அறுக்கப்படும்.

தறிகளில் இரண்டு வகைகள் உண்டு. மிதிபலகை குழி தோண்டி அதற்குள் வைக்கப்பட்டு இருக்கும். இறங்கி அமர்ந்துதான் நெய்ய வேண்டும். அது குழித்தறி எனப்படும். மற்றதில் எல்லா பாகங்களும் மேலே இருக்கும். ஒரு மேஜை போன்ற இருக்கையில் அமர்ந்து நெய்ய வேண்டும். எனவே இது மேஜைத்தறி என்றும் சில இடங்களில் சப்பரத்தறி என்றும் சொல்லப்படும்.

பின்குறிப்பு :- மேலே சொன்ன விபரங்களை நான் பார்த்ததை எழுத்தில் கொண்டுவர முயற்சி செய்துள்ளேன். முடிந்தவரை படத்திலும் விளக்க முயற்சி செய்துள்ளேன். படிப்பவர்களுக்கு புரியுமா என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. புரிகிறதா என்று தயவுசெய்து கமெண்ட்டில் சொல்லவும்.

இன ஒற்றுமை.

நமது இன ஒற்றுமைக்கும், பாரம்பரியத்தை மீட்டெடுக்க சில வழிகள் உள்ளன.

1. நமது நேச நாயனார் குரு பூஜையை நம் இனத்தவர் வாழும் இடங்களில் எல்லாம் கட்டாயம் கொண்டாடப் படவேண்டும்

அவரை மக்களின் மனதில் எடுத்துச் செல்ல, பதிய வைக்க எளிய வழி , அவரது குருபூஜை அன்று அவர் படத்தை வைத்து பூஜை செய்து, புளியோதரை போன்ற ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப் பட வேண்டும்.

நேச நாயனார் குருபூஜை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரம்.





2. நமது மக்களுக்கு ஒன்றிய, பிரிக்கவே முடியாத விஷயம் இறை வழிபாடு.

நம் மக்கள் இருக்கும் எல்லா இடத்திலும் கண்டிப்பாக கோவில்கள் இருக்கும். அவற்றிலே சாலிய_மஹரிஷியின் படத்தை சுவற்றில் பெரிதாக வைத்துவிட்டால் நாம் ரிஷிவழி வந்த பிராமணர்கள் என்பது நினைவுக்கு வந்துகொண்டே இருக்குமே...

எல்லா நமது கோவில்களிலும் இது செய்யலாம்.
தெரியாத மக்கள் யாரென்று
கேட்டு ..அதற்கு சொல்லி... அப்படியே வளர்ந்துவிடும் மாற்றம்.

அதற்கு என்னால் முடிந்த சிறு உதவியாக வீரராகவப் பெருமாள் கரத்தின் கீழே அமர்ந்த சாலிகோத்திர மகரிஷியின் படத்தை எடுத்து போட்டிருக்கிறேன். இதை போட்டோவாக்கி பயன் படுத்திக் கொள்ள முடியும். அல்லது உங்கள் விருப்பம். நமது இளைஞர்கள் நினைத்தால் முடியும்.

வாழ்க நமது ப்ராமணர்க்கு நிகரான சாலியர் குலம்.

கீழே படம்.