செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களும் குலதெய்வங்களும் 2

சாலியர்களின் குலதெய்வ வழிபாட்டை சொல்லும் போது பழக்க வழக்கங்கள் பற்றியும் சேர்த்தே தான் பேச வேண்டியுள்ளது.

அநாதி காலம் தொட்டே வழிபாடுகள் இருந்திருகின்றன. இயற்கை வழிபாடு முடிந்து நாகரீகம் ஆரம்பிக்கவும் தெய்வ வழிபாடு ஆரம்பம் ஆனது. இது எல்லாருக்கும் தெரியும்.


பெரும்பாலான குலதெய்வங்கள், காவல் தெய்வங்களாகவும் கிராம தேவதைகளாகவுமே இருக்கும். நமக்கும் இப்போது அப்படித்தான் - இப்போது.

என்னிடம் , நேரில் சந்தித்த சிலர் மற்றும் inbox, மூலமாகவும் கேட்டவர்கள் சில சந்தேகங்களை கேட்டனர். என்ன கேள்வி அடிக்கடி வந்ததென்றால் - "அடிப்படையில் நாம் சைவர்களா ? அல்லது வைஷ்ணவர்களா ?



இது நல்ல கேள்விதான் - என்னை பொறுத்தவரை. ரெண்டுமே உண்டு. நாம் பிருகு மஹரிஷி முதலாகத் தோன்றிய காரணம் கொண்டு, மேலும் பாவனரிஷிக்கு தன் தொப்புள் கொடி தாமரைத் தண்டு (பார்க்க - படம்) மூலம் நாராயணன் நூல் கொடுத்து நெசவு செய்யச் சொன்னதாலும் நாம் வைஷ்ணவர்களாகவும், நமது மூதாதையர் மார்க்கண்டேய மஹரிஷி சிவனால் மறு பிறவி கொடுக்கப்பட்டதால் சைவர்களாகவும் தான் இருந்தோம்.

நாம் இன்றைக்கு பல தெய்வங்களையும் நமது குலதெய்வமாக வணங்கி வருகிறோம். அந்த தெய்வ வழிபாடுகள் குறித்து நாம் #சுருக்கமாக பிறகு பார்ப்போம் - வாய்ப்பிருந்தால்.

குல தெய்வம் போக சில வீடுகளில் வீட்டுச்சாமியாக சீலைக்கார சாமி வழிபாடும் உண்டு. அது அந்தந்த வீடுகளுக்கு மட்டும் தனிப்பட்ட வழிபாடு.

சீலைக்கார சாமி பற்றி எல்லோருக்கும் தெரியும் தானே ? ஒரு குடும்பத்தில் சிறு வயதில் காலமான பெண் குழந்தை, ஏதாவது நிறைவேறாத ஆசையுடன், அல்லது உடன்கட்டை முறையில் தெய்வமான பெண் இவர்களின் துணியை வைத்து அவர்களை நினைத்து வழிபடுவது.

நாம் வடக்கில் இருந்தபோது சைவம், வைஷ்ணவம் இரண்டையும் வழிபட்டோம். பிறகு காஞ்சிபுரம் நகரில் குடியிருக்கும் சமயத்தில் நாம் வழிபட்ட அம்மன் பற்றி கேரள சாலியர் பற்றி பேசும்போது பார்த்தோம். நினைவிருக்கிறதல்லவா ? #கடவில்_பகவதி.

அது போக நாம் காஞ்சிபுரத்தில் வழிபட்டது ஒரு விநாயகர். இவரைப் பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. (நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே.) அதைப் பற்றி பேசுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar