செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களும் குலதெய்வங்களும் 4

நமது காஞ்சிபுரம் விநாயகர் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் புழுங்கல் அரிசி பிள்ளையார் அல்லது புழுங்கல் வாரி பிள்ளையார் என்ற பெயரில் அருள் செய்கிறார்.



வடக்கு ரத வீதியில் தேர் ஓடி முடித்து கிழக்கு ரத வீதியில் திரும்புமல்லவா... தேர் திருப்பத்திலேயே நிற்கும். ஆனால் வடம் மட்டும் ஒரு சிறு தெருவுக்குள் போய் திரும்ப கொண்டுவரப்படும். அந்த தெருவில் இருக்கிறார்.

ஆண்டாள்த்தாயார் பெரியாழ்வாரால் தத்தெடுக்கப் பட்டார். குருபரம்பரை கதைகளில் சுமார் ஐந்து வயது குழந்தையாக தத்தெடுக்கப் பட்டதாக #சொல்லப்படுகிறதாம். தெய்வக் குழந்தையை கொடுத்தது நாம்.

இந்த பிள்ளையாருக்கும் ஆண்டாள் கோவிலுக்குமான தொடர்பு...
2012 இல் அல்ல. அதற்கு 12 வருசம் முன்பாக ஆண்டாள் வடபத்திர சயனர் சுவாமி ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிகழ்வு நடப்பதற்கு முன் நிறைய தடைகளாகவே இருந்திருக்கிறது. அப்போது பிரஸ்னம் பார்க்கப் பட்டது. அதில் தெரிந்த விசயங்கள் ஆச்சர்யப்படத்தக்க அளவில் இருந்தது. அதன் விபரம் இது தான்....👇👇👇👇👇

"இந்தக் கோவிலின் ஈசான மூலையில் ஒரு விநாயகர் கோவில் இருக்கிறது. அந்த விநாயகர் கோவிலில் இருந்து தான் முதல் பிடிமண் எடுத்து ஆண்டாள் கோவில் அஸ்திவார பூஜை நடந்திருக்கிறது".

இடமும் காட்டிக் கொடுத்தது பிரசன்னம். வேறு யார் ? நம் விநாயகரேதான்!!!!

புரிகிறதா நம் குலப்பெண் ஆண்டாள். ஆகவேதான் நம் கோவிலில் எடுக்கப்பட்ட மண் அஸ்திவாரமாகியது. ஆண்டாள் திருமண கூரைப் புடவை பற்றி நாம் ஏற்கனவே எழுதியிருக்கிறோமல்லவா....

மேலும் பிரசன்னத்தில் தெரியவந்த விஷயம் ...👇👇👇
" அந்த விநாயகர் கோவில் கவனிக்க வழியில்லாமல் இருக்கிறது. அங்கு புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின் தான் ஸ்ரீ ஆண்டாள் தாயாருக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். " என்று பிரசன்ன சொல்லப்பட்டது.

அதன் படியே மேற்படி கும்பாபிஷேகம் (12 வருடம் முன்) நடக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு நம் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.



நான் அந்தக் கோவிலுக்கு சுமார் ஆறு ஆண்டுகள் முன்பு சென்றிருந்தேன். அங்கு நிர்வாகத்தில் இருக்கும் (வேறு இனத்தவர்) இது சாலியர் வழிபட்ட விநாயகர் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் காஞ்சிபுரம் விநாயகர் என்பதை மறுத்தார்.

ஆனால் இவர்தான் காஞ்சிபுரம் விநாயகர் என்பது நான் தேடிய காலத்தில் தெரிய வந்தது. சாமியின் தோற்றமும் வரலாற்றை நிரூபிக்கும் அளவில் இருந்தார்.

நண்பர்கள் சென்று வாருங்கள். நமது குலதெய்வம் அருள் புரிய காத்திருக்கிறார். சென்று வந்த அனுபவத்தை எழுதுங்கள். பராமரிக்கும் நபர்களுக்கு முடிந்தால் நமது நன்றிகளைத் தெரிவியுங்கள். நமக்கு வழிபாடே முக்கியம்.

மேலும் சத்திரப்பட்டி , புத்தூர் சாலியர் பற்றியும் பேசுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar