புதன், 30 நவம்பர், 2016

மாயவரம் சாலியர் திருமணம் 2

சகோதரி பெண்ணிடம் தட்டைக் கொடுத்த பிறகு புரோகிதர் வந்து சடங்கை தொடர்வார். பின் கூறைப்புடவையை பெண்ணிடம் தருவார். கூறைப் புடவை 18 முழம் நீளமிருக்கும். தாலி கட்டும் போது பெண் கூறைப் புடவையை பிராமண முறையில் மடிசார் கட்டியிருப்பார். மாப்பிள்ளை கச்சம் வைத்து வேஷ்டி கட்டி இடுப்பில் துண்டு, தலைப்பாகையும் வைத்து இருப்பார்.



பிறகு தாலி கட்டுவார். தாலி கட்டிய பிறகு மணமக்கள் மணவறையைச் சுற்றிவந்து பொறி போடுவது, அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது முதலான சடங்குகள் நடக்கும். பிறகு திருமண விருந்து நடக்கும்.

திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை தோழன் அக்கினிப் பானையில் ஹோமம் வளர்த்த அக்னியை மூன்று முறை போடுவார். பெண்கள் யாவரும் கூட்டமாக இருந்து பாக்கு, வெற்றிலை, பூ, பழம், சர்க்கரை, குங்குமம் எல்லாவற்றையும் அனைவருக்கும் கொடுத்து, தட்டில் தேங்காய், வெற்றிலை பழம் வைத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கும் கொடுப்பார்கள். இதை சம்பந்தி பங்கு கொடுப்பது என்று சொல்வார்கள்.

மாப்பிள்ளையின் அண்ணன் அல்லது தம்பியின் மனைவி அக்னிப்பானையை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடக்கும். பெண், மாப்பிள்ளை இருவரும் மாலையில் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுச் பிறகு, பிறகு புனுகீஸ்வரர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து, நமது நேச நாயனாரையும் தரிசித்து வருவார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் மேளதாளத்துடன் வீதியில் காரில் ஊர்வலம் வருவார்கள். இதன் பின் உறவினர்கள் மொய் எழுதுவார்கள்.

திருமணம் முடிந்து இரண்டாவது நாள் காலையில், நல்ல நேரத்தில் பந்தலில் விளக்கேற்றி, பாய் விரித்து ஆண்களும் பெண்களும் அமர்ந்து, மாப்பிள்ளை பெண்ணை அமரவைத்து இரண்டு கிண்ணத்தில் நல்லெண்ணெய், அதன் மீது கொஞ்சம் அருகம்புல் கட்டி வைத்திருப்பார்கள். இரண்டு உருண்டை அரப்பு , மஞ்சள் அருகில் இருக்கும். புரோகிதர் இதை நடத்தி வைப்பார். மாப்பிள்ளையை மனையில் அமர வைத்து பெண்ணைக் கிண்ணத்தில் உள்ள எண்ணெயை அருகம்புல்லால் தொட்டு மாப்பிள்ளையின் உச்சந்தலையில் வைக்கச் சொல்லுவார். பிறகு பெண்ணுக்கு இந்தச் சடங்கை மாப்பிள்ளை செய்வார். எண்ணெய் வைத்த பிறகு அரப்பு உருண்டையையும் மஞ்சளையும் கொடுப்பார். இருவரும் எண்ணெய் தேய்த்து உட்காரவும் முதல் நாள் கையில் கட்டிய கங்கணம் களையப்படும்.



இதன் பிறகு நலுங்கு........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar