செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களும் குலதெய்வங்களும் 1

சாலியர்களின் குல தெய்வங்களை பற்றி பேசுவதற்கு முன்பு மாயவரம் சாலியர்கள் சம்பந்தமான ஒரு விஷயத்தைச் சொல்லிவிட்டு துவங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

காஞ்சிபுரத்திலிருந்து தமிழகத்தின் தென்பகுதியினை நோக்கி நடைபயணமாகக் கிளம்பிய சாலியர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், நாகர்கோயில், சாலியமங்கலம், குத்தாலம் போன்ற ஊர்களுக்குச் சென்றனர். ஒரு பிரிவினர் மாயவரம் வந்து காவிரி ஆற்றின் தென்கரையில் தங்கினர். சிதம்பரத்திற்கு அருகாமையில், புவனகிரி அருகில் உள்ள கீரப்பாளையம் என்ற ஊருக்கு வந்த போது, ஒரு குடும்பத்தினைச் சேர்ந்த பெண்ணிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் அக்குடும்பம் மட்டும் அங்கிருந்த தோப்பில் தங்கியதாகவும், சுகப்பிரசவம் ஆனால், ஆண்டுதோறும் வந்து வழிபடுகிறோம் என அங்கு குடி கொண்டிருந்த அய்யனார் சாமியிடம் வேண்டிக் கொண்டனர், அந்தப் பெண்ணிற்கு சுகப்பிரசவம் ஆகிய பின்னர் புறப்பட்டு மாயவரம் வந்து சேர்ந்தனர்.

அக்குடும்ப வம்சாவளியினர் மட்டும் கீரப்பாளையம் அய்யனாரையே தங்கள் குலதெய்வமாக்க் கொண்டு வழிபடுகின்றனர் என்பதோடு, இங்கு சென்று படையல் போட்டு வழிபட்ட பின்னரே தங்கள் குடும்பத்தில் எந்த நல்ல காரியம் என்றாலும் இன்றைக்கும் செய்கின்றனர் என்பதும், ஆண்டுதோறும் அனைத்துக் குடும்பத்தினரும் ஒரு நாளில் காலையில் இக்கோயிலில் ஒன்று கூடி படையல் போட்டு சாமி கும்பிட்டு மாலையில் திரும்பி வருகின்றனர்.



குலதெய்வ வழிபாடு பற்றி ஒரு உதாரணத்திற்கு மேல் சொன்ன சம்பவம். அடிப்படையில் நாம் #வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதை நாம் ஏற்கனவே இங்கு பேசியிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உண்டு.

அவை நமது சாலியர்களின் பிரிவுகளாக, கோத்திரவாரியாகவும் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar