செவ்வாய், 29 நவம்பர், 2016

சாலியர்களின் உணவு

சாலியர்கள் ஆரம்ப காலங்களில் சைவ உணவு மட்டுமே உட்கொண்டார்கள். அரிசி, கம்பு, சோளம் போன்றவையே அடிப்படை உணவுகள். பிற்பாடு தங்கள் குலப்பெருமையை மறந்ததனால், அசைவ உணவுப் பழக்கம் ஏற்பட்டது.

அசைவ உணவு உண்பவர்கள் கூட செவ்வாய், வெள்ளி, கார்த்திகை போன்ற நாட்களில் உண்பதில்லை. இப்போது அப்படி இருக்கிறதா தெரியவில்லை. தென் தமிழகம் வந்த பிறகு நாம் முருக பக்தர்கள் ஆனபடியால் முருகனுக்கு உகந்த கார்த்திகை நாளில் நெசவுக்கு கட்டாய விடுமுறை.

#உடை

ஆண்களாயின் வேஷ்டி, மேல்துண்டு, பெண்கள் சேலை. கைம்பெண்கள் வெள்ளைப் புடவை அணிகின்றனர். பெரும்பாலும் ரவிக்கை அணிவது கைம்பெண்களிடம் இல்லை. பிறகு வெள்ளை ரவிக்கை பழக்கம் வந்தது. இப்போது வெள்ளை அணிவது வழக்கொழிந்து விட்டது.

பெண்கள் பின்கொசுவம் வைத்து சேலை அணிவது நமது கலாச்சாரம். இப்போது இது கிடையாது. காதுகளை பெரிதாக வளர்த்து பாம்படம் அணிவதும் உண்டு.

தாலி பிரத்யேகமாக சிறகு பிள்ளையார் (பார்க்க- படம்)என்ற மாடலில் அணியப்படும்.



ஆண்கள் முன்புறம் முடி மழித்து பின்புறம் குடுமி வைக்கும் பழக்கம் இருந்தது. (பார்க்க - படம்)இதனுடன் பூணூல் அணிந்தனர்.
நமது ஏழூர்களில் இது கட்டாயம் இருந்தது. யாராவது குடுமி எடுத்துவிட்டு க்ராப் முடி வெட்டிவந்தால் ஊரில் கூப்பிட்டு விசாரிக்கப்பட்டு கண்டிக்கப் படுவர்.



பிற்காலத்தில் சினிமா அதிகமாக பார்க்க ஆரம்பித்த பிறகு (தியாகராஜ பாகவதர்) கிராப் என்பது கட்டுப்படுத்த இயலாமல் போய்விட்டது. அத்தோடு அசைவமும் நுழைந்தது. #பூணூல் வெளியேறிவிட்டது - அசைவத்தால் அல்ல. கிராப்பு வெட்டியதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar