வெள்ளி, 5 ஜனவரி, 2024

சாலியர்களின் பூர்வீக குலதெய்வம்


மேலத்திருமாணிக்கம் அரிய மாணிக்கவல்லித் தாயார். ஏழூர் சாலியர்களின் குலதெய்வம். செப்புப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்ட ஏழூர் சாலியர்களின் குலதெய்வம் இவள். 
எப்படி செல்வது :- மதுரை அருகிலுள்ள கல்லுப்பட்டியில் இருந்து பேரையூர் சென்று, அங்கிருந்து எழுமலை என்ற ஊருக்கு செல்லும் பேருந்தில் ஏறினால் மேலத்திருமாணிக்கம் என்கிற ஊரை அடையலாம். அங்கு தான் இந்த ஆலயம் உள்ளது. 

பேரையூரில் எழுமலை செல்லும் பேருந்து கிடைக்கவில்லையென்றால், தேனி அல்லது உசிலம்பட்டி செல்லும் வண்டியில் ஏறி, சின்னக் கட்டளை என்கிற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து T.ராமநாதபுரம் செல்லும் பேருந்தில் ஏறினாலும் மேலத்திருமாணிக்கம் என்கிற ஊரை அடையலாம்.

தேவி வடக்கு நோக்கிய திருமுக மண்டலம். எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலம். விநாயகர், கருப்பசாமி, காலபைரவர், வராஹி முதலிய தெய்வங்கள் இந்த ஆலயத்தில் பரிவார தேவதைகளாக அருள் புரிகிறார்கள். தாயாருக்கு சிம்ம வாகனம் எதிரிலேயே உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar