வெள்ளி, 5 ஜனவரி, 2024

கல்வெட்டுக்களில் நெசவும் சாலியரும்


12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலக் கல்வெட்டுக்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த சாலியர், கைக்கோளர் சாதிகளை குறிப்பிடுகின்றனர். கைக்கோளர் பிரிவைச் சார்ந்தவர்கள் தமிழ் பேசுபவர்களாகவும், சாலியர் பிரிவைச் சேர்ந்தவர்கள் தமிழ், தெலுங்கு மொழி பேசுபவர்களாகவும்; பட்டு சாலியர், பத்மசாலியர் என்ற உட்பிரிவு உடனும் இருந்தனர். மேலும் கைக்கோளர் என்னும் தொழில் சார்ந்த பட்டமாக தமிழ் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. 
பாண்டியர் கால கல்வெட்டு ஒன்றின் மூலம் கைக்கோளர், சாலியர் நெசவாளர்களின் தறிகளுக்கு வரியாக வசூலிக்கப்பட்டது என்று அறிகிறோம். (Annual report on South Indian epigraphy Madras, page number 300, 1909) 
 பஞ்சு பீலி என்னும் பருத்தி வரி பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, வட ஆற்காடு, செங்கல்பட்டு பகுதிகளில் 1193 முதல் 1351 வரை தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வந்தது. (South Indian inscription volume 24, page number 193, volume 24 number 223 ) (inscriptions of the Pudukkottai state Madras, number 395, 402, 403 , 409, 416, 424, 472, 486, 559, 578, 584)

 பஞ்சுபீலி என்னும் வரி பல்லவர் காலத்திலோ, சோழர் காலத்திலோ காணப்படவில்லை.
தற்போதைய செங்கல்பட்டு, வட ஆர்க்காடு பகுதிகளில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் "தறி கடமை" என்னும் நெசவு வரி வசூலிக்கப்பட்டது. 13 14 ஆம் நூற்றாண்டின் மையப் பகுதிகளில் தற்போதைய புதுக்கோட்டை, செங்கல்பட்டு, வடஆற்காடு பகுதிகளில் "தறி இறை" என்னும் வரி வசூலிக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அரைக்கால் பணம் வரியாக துணி விற்பனைக்கும், துணி விற்பனை மையங்களுக்கும், நெசவாளர் குடியிருப்புகளுக்கும் விதிக்கப்பட்டது. இப்பகுதியில் வெளியாட்கள் விற்றாலும் இந்த வரி செலுத்த வேண்டும். 

Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar