வெள்ளி, 5 ஜனவரி, 2024

சாலியர் கணக்கெடுப்பு

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏

அடியேன் ஏற்கனவே பலமுறை வலியுறுத்திய செய்தியை மீண்டும் ஒருமுறை தெரிவிக்க விரும்புகிறேன்....

எதிர்வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது
நாம் "சாலியர்"என்ற பெயரை மட்டும் பதிவு செய்தால் மைனாரிட்டியாக தான் இருப்போம். 

நம்முடைய உட்பிரிவான பத்மசாலியர், பட்டு சாலியர், பட்டாரியர், (அரசாங்க கெஸட்டுகளில் வரிசை எண்103 இல் அனைத்து பிரிவையும் ஒரே பிரிவாக தான் காட்டப்பட்டுள்ளது. படம் இணைப்பு. கெஸட் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டது) மாயவரம், மணமேடு சாலியர்கள் போன்ற அனைத்து பிரிவுகளையும் சேர்த்து ஒரே குடையின் கீழ் வர வேண்டும். 
என்றைக்கு இருந்தாலும் நம் இனம் முன்னேறுவதற்கும், வேறு சில காரணங்களுக்கும் இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை மனதில் கொண்டு, பயன்படுத்திக் கொண்டு இதை செய்ய வேண்டுவது அவசியம். நமது இனப் பெரியோர்கள் Narayanan S சார் போன்றவர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் மிகவும் நல்லது என்று கேட்டுக்கொள்கிறேன். 🙏🙏🙏

இன்னொரு விஷயமும் கூட சொல்ல வேண்டியுள்ளது. திருச்சி மணமேடு சாலியர்கள் நம்மவர்கள் ஆக இருந்தாலும் 7 ஊர் சாலியர் பிரிவில் வரமாட்டார்கள். ஆனால் அவர்களும் நம்மவர்களே. மேலும் மணமேடு சாலியர்கள் , பத்மசாலியர்களுடன் பெண் எடுக்கின்றனர் என்பதை நமது மணமேடு நண்பர் A S A Muthuraman அவர்கள் தெரிவிக்கிறார். 

- சாலிய மஹரிஷி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar