வெள்ளி, 5 ஜனவரி, 2024

சாலியர்களின் பூர்வீகம்


முன்னுரை :- சாலியர்கள் முதல் முதலாக தோன்றிய இடம் எது?? நாம் யார் ? என்று பலரும் இன்பாக்ஸிலும், நேரிலும் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்த பதிவு. 
_______________________________
கடவில் பகவதி ஆலயம் பற்றிய புராணம் சாலியர்களின் தோற்றம் பற்றி விரிவாக பேசுகிறது. கங்கைக் கரையில் உள்ள #காசி நகரத்திலிருந்து திரிப்தா ஆண்டு, பஞ்சத்தால் மக்கள் அங்கிருந்து வெளியேறி தெற்கு நோக்கி புறப்பட்டு வந்து, சோழர்கள் தேசத்தில் வாழ்ந்தனர். அந்தக்காலத்தில் விஜயநகரம் , தஞ்சாவூர், காஞ்சிபுரம், கும்பகோணம், ராஜமுந்திரி முதலிய நகரங்கள் அடங்கிய தேசத்தை "சோழநாராயணபட்" என்பவர் ஆண்டு வந்தார் . அவர் சேர வம்சாவழியைச் சேர்ந்தவர். அவருடன் இருந்த நம்பூதிரிகள் யோசனைப்படி விழா சமயங்களில் அணியத்தக்க பட்டு மந்திர வஸ்திரம் தயார் செய்யும்படி இவர்களை கட்டளையிட்டார் - இவர்கள் நெசவு செய்யும் இனத்தவராய் இருப்பதால்.  

மந்திர வஸ்திரத்தை பட்டாரியர் எனப்படும் பட்டு சாலியர் தயார் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு அரசர் நிரந்தரமாக தங்கும்படி இடம் கொடுத்தார். 

 கொச்சியில் இவர்கள் 'பட்டாரியா' எனவும், வடக்குப் பகுதியில் 'சாலியர்' எனவும், தென்பகுதியில் 'தேவாங்கர்' எனவும், மற்றவர்கள் 'செட்டியார்' என்றும் அழைக்கப்பட்டனர். மொத்தம் நான்கு பிரிவுகள். 
இவர்கள் யாவரும் சதுவார்ய வைசிய வம்சத்தை சேர்ந்த பட்டு சாலியர் சாதியினர் தான். (சதுவார்ய- சதுர் என்றால் சமஸ்கிருதத்தில் 4 என்று அர்த்தம்) 

 காஞ்சிபுரத்தில் வாழ்ந்த பட்டு சாலியர் சாதியினர் கடவில் பகவதியை வணங்கி வந்தனர். அந்த ஊரைவிட்டு இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, வெளியேறும்போது தேவியின் சிலையை கடலில் இருந்து விட்டு வெளியேறினர்.

 பின்பு ஒருகாலத்தில் பட்டாரியர் வாழ்ந்துவந்த 'பள்ளிபுரம்' ஏரியின் பக்கம் குழந்தைகள் விளையாடும்போது இந்த சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தெற்கத்து வீட்டுக் குழந்தைகள் புல் வெட்ட சென்ற சமயம், ஒரு கல்லில் கத்தியை தீட்டும்போது கல்லில் இருந்து ரத்தம் வழியவே, பெரியவர்கள் இந்த கல் தேவியின் சிலை தான் என்று உணர்ந்து சிறிய கோயில் கட்டி சிலையை பிரதிஷ்டை செய்தனர். முன்பு நூறு ஏக்கர் நிலங்களை கொண்ட கோயிலாக இருந்த இது, பல ஆக்கிரமிப்புகளைக் கடந்து இப்போது ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ளது. இவ்வாலயம் பட்டாரியர் கோவில் என்று மற்றவர்களால் கூறப்படுகிறது. 

இவ்வாலயம் வைக்கம் ஏரியின் மேற்கு கரையில் உள்ள மகேஷ்வரர் ஆலயத்தை ஒட்டியுள்ளது.

அடியேன் saliya maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar