வெள்ளி, 5 ஜனவரி, 2024

மலபார் மலையாளம் சாலியர்கள் 1


முன்குறிப்பு:- மலையாளம்+சாலியர் என்பதுதான் "மலையாஞ்சாலியர்" என்று ஆயிற்று. 
 மலையாளத்தை சேர்ந்த பருத்தி நெசவு செய்யும் சாலியர்களைப் பற்றி பிரான்சிஸ் என்பவர் 1901 சென்னை மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் கூறுகிறார் - "உடை, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் இவர்கள் மலபாரைச் சார்ந்த கைவினைஞர் சாதியை ஒத்தவர்கள். எனினும் இவர்கள் பட்டர், பிராமணர் இவர்களைப் போல தனித்தனி தெருக்களில் தங்கி வாழ்ந்து, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் வந்து குடியேறியவர்கள். "பொதுவான்" எனப்படும் தங்கள் சாதிக்குரிய அம்பட்டர்களை இவர்கள் பெற்றுள்ளனர். கிழக்கு கடற்கரையை சார்ந்த சாலிய நெசவாளர்களை போல இவர்கள் 'பூணூல்' அணிவதில்லை. மூதாதையரை வழிபடும் பழக்கம் இவர்களிடம் இருப்பினும் அதற்காக இவர்கள் பிராமண புரோகிதர்களை வைத்துக்கொள்வதில்லை. மலபார் சாதிகளில் இவர்களிடையே மட்டும் வலங்கை , இடங்கை பிரிவுகளும் அது தொடர்பான சச்சரவுகளும் காணப்படுகின்றன. இவர்களுள் இடங்கை பிரிவினர் உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகின்றனர். எனவே இச்சாதியர் கிழக்கு கடற்கரையில் இப்பிரிவுகள் தோன்றியபின் கிபி. பதினோராம் நூற்றாண்டிற்குப் பின் மலபாரில் வந்து குடியேறியவர்கள் என்று கருதவேண்டியுள்ளது. இவர்களில் சிலர் மருமக்கள்தாய உறவு முறையை(சொத்துக்காக) கடைபிடிக்கின்றனர். இவர்கள் தெருக்களில் வாழ்ந்து வருவதால் "தெருவன்" என்றும் அழைக்கப்படுகிறார்கள். வலங்கை பிரிவினர் கணேசரையும், இடங்கை பிரிவினர் பகவதியையும் வழிபடுகின்றனர். வலங்கைப் பிரிவினர், கணபதி வழிபாட்டை அதிகம் புகுத்த முனைந்த 'சாமோரின' அரசர் ஒருவரால் மலபாருக்கு வரவழைக்கப்பட்டு இருக்கலாம். 

                              மேலும்...

-saliya maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar