வெள்ளி, 5 ஜனவரி, 2024

பட்டாரியர் சமுதாயம்


பட்டாரியர் சமுதாயத்தினர் கங்கை நதியின் வடக்கு கரையில் வாழ்ந்ததாகவும், அங்கு ஆட்சி செய்த சச்சேந்திர மன்னனை நயவஞ்சகத்தால் வென்று, அரசைக் கைப்பற்றிய அமைச்சர் "கட்டியன்" என்பவர் அங்கு வாழ்ந்த பட்டாரியர்களிடம் சச்சேந்திர மன்னனுக்கு கொடுத்துவந்த பட்டுப் பரிவட்டம் எனக்கும் தர வேண்டும் என்று கேட்க, பட்டாரியர்கள் மறுத்ததால் பல துன்பங்களுக்கு உட்பட்டு, தங்களது குல தெய்வங்களான சக்தி தேவி மற்றும் விநாயகர் இவர்களின் சிலைகளை எடுத்துக் கொண்டு தாங்கள் வாழ்ந்த தத்தைப் பட்டணத்தை விட்டு தெற்கு நோக்கி வந்தனர். இவர்கள் வணங்கும் குல தெய்வம் ஆயுர்பிராட்டி அம்மன், முத்தாச்சி அம்மன் என்றும் வில்லுப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் கலைக்கோட்டு மாமுனி என்ற மகரிஷியே தங்கள் குல முதல்வராக கொள்கின்றனர். திருமணம் முடித்த மணமக்கள் முதன் முதலில் கலைக்கோட்டு மஹரிஷி என்ற ஆதி மஹரிஷியின் கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு வருவது வழக்கம். வீரவநல்லூரில் ஆதிமஹரிஷி கோவில் இருக்கிறது. 

Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar