வெள்ளி, 5 ஜனவரி, 2024

பூதப்பாண்டி சாலியர் கல்வெட்டு


நாஞ்சில் நாட்டின்(நாகர்கோவில்) பூதப்பாண்டியில் இருக்கும் பாண்டீஸ்வர உடைய நாயனார் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கும் விஷயம்(கல்வெட்டில் மலையாள வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது) இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சாலியர் வடசேரி பகுதியில் வாழ்ந்து வந்ததற்கு சாட்சி :- 


வரி 1 முதல் 11 :- கொல்லம் ஆண்டு 867 தை மாதம் 19ஆம் தேதி இந்த சாசனம் நாஞ்சில்நாட்டு பூதப்பாண்டியில் இருக்கும் பூதப்பாண்டீஸ்வர உடைய நாயனார், ஸ்ரீ பண்டாரத்தில் (அரசரின் கோவில்) நிதி நிர்வாகத்தில் (ரவிவர்மா , 1684 முதல் 1717 வரை) இருந்து அரசர் அவ்வூரில் உள்ள சாலிய நகரத்தாருக்கு கல்வெட்டு விட்டுக்கொடுத்த சலுகைகள். 

வரி 12 முதல் 20 வரை:- அரசரின் ஆணைப்படி சாலியர்கள் வடசேரியில் அவர்களுக்காக இருக்கும் நிலங்களில் குடியிருக்கவும், நகரத்தின் மேற்கு பகுதியில் (உபத்திரம் கொண்டு) வீடுகளை இழந்த சாலியர்களுக்கும் அந்த சேரியில் குடியமர அனுமதிக்கப்படும்.

வரி 21 முதல் 34 வரை:- சாலியர் தெருக்களில் யாராவது தவறு செய்தால், சாலியக்குடியில் அவர்களுக்கு நெல், வித்து(விதை), பாத்திர பண்டம், மாடு, கன்று, நூல் ,பாவு முதலியவைகள் பணயம் எடுக்கும் உரிமை தடை செய்யப்படும். தவறு செய்பவர்கள் (மறித்து) பிடித்து வரப்படுவார்கள். அவர்கள் பிறர் காதை அறுத்த தவறுக்குரிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

வரி 35 முதல் 41 வரை:- அந்த தவறுக்கு அவர்கள் சரியான ஈடு செய்தபின் (சாலியர் தெருக்களில்) அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள். 

வரி64 முதல் 75 வரை:- கல்லிலும் செம்பிலும் வெட்டி இருக்கும் இந்த சாசனம், வானில் சந்திரன் நட்சத்திரங்கள் இருக்கும் காலம் வரை தொடரும். இது ஆதி சண்டேஸ்வரரின் ஆணை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar