வெள்ளி, 5 ஜனவரி, 2024

தறியும் வரியும்


          தற்போதைய செங்கல்பட்டு, வடஆற்காடு பகுதிகளில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர்களால் தறி கடமை என்னும் நெசவு வழி வசூலிக்கப்பட்டது. (Inscription of the pudukkottai state, 632, AD1190, 91) 

            13 , 14 ஆம் நூற்றாண்டின் மைய காலத்தில் தற்போதைய புதுக்கோட்டை செங்கல்பட்டு வடஆற்காடு பகுதிகளில் தறி இறை என்னும் தறிக்கான வரி வசூலிக்கப்பட்டது (Annual report on south Indian epigraphy)

          முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அரைக்கால் (வீசம்) பணம் வரியாக துணி விற்பனைக்கும், துணி விற்பனை மையங்களுக்கும் நெசவாளர் குடியிருப்புகளுக்கும் விதிக்கப்பட்டது. இப்பகுதியில் வெளியார் விற்றாலும் இந்த வரியை செலுத்த வேண்டும்.(Annual report on south Indian epigraphy)
           ஒரே சாதியைச் சேர்ந்த நெசவாளர்கள் பொதுவாக ஒரே இடத்தில் குழுக்களாக வாழ்ந்தனர். 14வது நூற்றாண்டில் நெசவாளர்களை திருமடை வளாகம் என்னும் கோயில் எல்லைக்குள் நிர்வாகத்தால் குடியமைக்க அனுமதியளித்தனர். கோயில் அருகே இது போன்று பல நெசவாளர் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சிதம்பரம் கோயில் அருகே குடியமைந்த நெசவாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோயிலுக்கு ஆண்டுதோறும் 4 புதிய நீளத்துணியும், ஐந்து சிறிய வகை துணியும் கொடுக்க வேண்டும்.

           1334 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில், ஒரு ஊரில் கோயில் அருகே குடியமைந்த நெசவாளர்களை பாதுகாக்க ஆண்டுதோறும் ஒரு குடும்பத்துக்கு கால் பணம் வரியாக வசூலிக்கப்பட்டது. 

            சென்னையில் உள்ள திருவொற்றியூரில் கோயில் அருகே கூடியிருந்த 66 நெசவாளர் குடும்பங்களிடம் ஆண்டு ஒன்றுக்கு தறி கடமையாக ஒவ்வொரு தறிக்கும் ஆறேகால் பணம் வசூலிக்கப்பட்டது. 
 இந்த தறி கடமை ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாசம் வசூலிக்கப்பட்டது. (Annual report of epigraphy)

               சேணகிரி, குளத்தூர்(Inscription of the pudukkottai state,no486,274)ஆகிய ஊர்களில் இருந்து இடம்பெயர்ந்து நெசவு மையங்களுக்கு வந்த நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கால் பணம் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. (Annual report of epigraphy 35,1933-34) 

          தமிழகத்தில் நெசவுத் தொழில் சிறப்பிடம் வகித்ததை ஒரே ஊரில் 411 தறிகள் இருந்தன என்பதில் இருந்து அறிய முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar