வெள்ளி, 5 ஜனவரி, 2024

நாடு முழுவதும் நெசவு இனங்கள் 2



மேலும்..... G.S.Ghurye  - (சமூக மற்றும் மானிடவியல் பேராசிரியர்) - அவர்கள் தன்னுடைய 'Castes and Races in india'  என்ற நூலில் -  தென்னிந்தியாவில் உள்ள கைத்தறி நெசவாளர் இனங்களை குறிப்பிடும்போது பட்டசாலி,  சாலி,  பத்மசாலி,  பட்டுநூல்காரர் என்ற இனங்களை பற்றி மட்டுமே பிரதான சாதிகளாக குறிப்பிடுகிறார். அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டாரியர் மற்றும் அடவியர் இரண்டும் ஒரே சாதியை குறிப்பிடுவன.  அடவியார் என்பது பட்டசாலியர் அல்லது பட்டாலியர் அல்லது பட்டாரியர் சாதியினரின் பட்டமாகும். 
தேவாங்கர், பத்மசாலியர் பட்டு சாலியர் என்பவர்கள் தெலுங்கு பேசும் நெசவாளிகள். கைக்கோளர் மற்றும் தேவாங்கர் இனங்கள் சற்று பிற்காலங்களில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும்.  எனவே 'G.S.Ghurye' எழுதிய சாதிகளில் இந்த சாதிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. அல்லது அவர் தவிர்த்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. 

அதனால் தான் அரசாங்க பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பட்டு சாலியர்,  சாலியர் , பத்மசாலியர்,  பட்டாரியர் என்கிற பெயர்கள் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.‌ 'பட்டு சாலியர்' என்ற சாதி பத்மசாலியர் இனத்தின் உட்பிரிவு தான் சொல்லப்படுகிறது.  இவர்களும் பத்மசாலியர் போன்று தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். 

 முடிவாக சாலியர்,  பட்டாலியர் என்ற பட்டாரியர் என்ற இரண்டு சாதிகளும் தமிழ்பேசும் கைத்தறி நெசவாளர் என்பதும்;  பத்மசாலியர்,  பட்டு சாலியர் என்னும் சாதியினர் தெலுங்கு பேசும் கைத்தறி நெசவாளர்கள் என்பதும் தெரிய வருகிறது. 

அடியேன் saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar