வெள்ளி, 5 ஜனவரி, 2024

நெசவாளர்களும் துணிவணிகமும்


பதினாறாம் நூற்றாண்டில் முதலாளித்துவம் தலை எடுக்க தொடங்கியது. அப்போது நெசவுத்தொழில் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாயின.( South Indian inscriptions vol 9 page516) 
கிபி 1525 ஆம் ஆண்டில் தலைமை நெசவாளர் ஒருவருக்கு 10 தறிகளுக்கான பொறுப்பு வழங்கப்பட்டது. பொதுவாக நெசவாளர்கள் சாலியர்கள் என்று அழைக்கப்பட்டாலும், கல்வெட்டுகளில் கைக்கோளர் பிரிவைச் சார்ந்த சமூகத்தின் தலைவரை 'முதலி' என்னும் பெயருடன் குறிப்பது (அவர்கள் தொழிலுக்கான முதல் அதாவது மூலதனத்தை கொண்டிருந்தனர் என்பதையும்), அவர்கள் சமூகத்தில் முக்கிய இடம் வகித்தனர் என்பதையும் காட்டுகிறது. (Annual report on sout Indian epigraphy, madras 365 of 1912) 
வணிகர்கள் ஆக மாறிய நெசவாளர்கள் 'செட்டி'(இன்றளவும் நல்லி குப்புசாமி செட்டியார் பத்ம சாலியராக இருந்தபோதிலும் செட்டியார் என்றே அழைக்கப்படுகிறார்) மற்றும் 'நாயகர்' என்னும் பின்னொட்டை பெற்றிருந்ததை காஞ்சிபுரம் , சிதம்பரம் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

 கல்வெட்டில் காணப்படும் 'கசாய வர்க்கத்தார்' எனும் சொல் கைக்கோளர்கள், வணிகர்களாகவும் செயல்பட்டனர் என்பதை குறிக்கிறது.

இந்த செயல்பாடுகள் சோழமண்டல நெசவுத்தொழிலில் முதலாளித்துவ கூறுகள் 16ம் நூற்றாண்டில் வளர்ச்சியுடைய தொடங்கியதை காட்டுகின்றன. 

சோழ மண்டலத்தில் பல கைக்கோளர்கள் கூட்டாக சேர்ந்து சாயத்தொழில் மையங்களுக்கு உரிமையாளர்களாக இருந்துள்ளனர். (.( South Indian inscriptions volume 22, no24 ; Annual report on sout Indian epigraphy, madras 240 of 1906) 

செங்கல்பட்டு பகுதியில் குளத்தூர் என்னும் இடத்தில் ஒரு கல்வெட்டு கைக்கோள நெசவாளர்களை 'பலபட்டடையார்' என்று கூறிப்பதை கொண்டு அவர்கள் பல பட்டறைகளுக்கும், சாயத்தொழில் மையங்களுக்கும் உரிமையாளர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது . சாலியர், சேனியர் போன்ற பல குழுக்கள் தறிகளுக்கு உரிமையாளர்களாக இருந்துள்ளனர். அதேபோன்று வணிகர்களும் தறிகளுக்கு உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.

Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar