வெள்ளி, 5 ஜனவரி, 2024

தொடர்சியான இடம்பெயர்வில் சாலியர்கள்


சாலியர்கள் முன்பு சிதம்பரத்தில் குடியேறி, கோவில் விழாக்களுக்கு தேவையான துணிகளை உற்பத்தி செய்து கொடுத்து வந்தனர். பின்னர் சாலிய நெசவாளர்கள், துணி வணிகர்கள் ஒரு சில சிக்கல்களால் சிதம்பரத்தை விட்டு வெளியேறியது தெரிகிறது. ( Annual report of on South Indian epigraphy Madras 1887-1955, 308 of 1913). உள்ளூர் அரசு அலுவலர் திருவம்பல பெருமாள்புரம் எனுமிடத்தில் வெளியேறிய சாலியர்களுக்கு பதிலாக கைக்கோளர் களுக்கான புதிய குடியிருப்பை ஏற்படுத்தினர். அவர்கள் அழிந்த நிலையில் இருந்த நெசவுத் தொழிலுக்கு புத்துயிரூட்டி கோவில் விழாக்களுக்கு துணிகளை உற்பத்தி செய்து தருவதாக ஒப்புக்கொண்டனர்.(மேற்படி 136 of 1912). எனவே சிதம்பரத்தில் இருந்து வெளியேறிய ஒரு நெசவு குழுவுக்கு மாற்றாக மற்றொரு குழு குடியேறியது(மேற்படி 308 of 1913). 
நெசவாளர்களை மீண்டும் சொந்த குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டுவர சோழ அலுவலர்கள் முயன்றனர். எனவே திருவாமாத்தூரில் வரிச்சுமையால் இடம்பெயர்ந்த சாலிய நகரத்தார்களிடம் அவ்வூர் அலுவலர்கள் அவர்களை திரும்ப வருமாறு வேண்டினர்.(மேற்படி 471 of 1920).

 சாளுக்கியில் உள்ள கல்வெட்டு நெசவாளர்கள் வரி மற்றும் செலுத்தப்பட வேண்டிய பிற தொகைகளை செலுத்த இயலாமையினால் ஊரை காலி செய்து வெளியேறினர் என்று தெரிவிக்கிறது(மேற்படி 21 of 1921, 471 of 1920). மேற்காணும் இரு இடங்களை விட்டு வெளியேறிய நெசவாளர்களை திரும்ப அழைத்து மீண்டும் நெசவு தொழிலை மேற்கொள்ள, சோழ அலுவலர்கள் ஆதரவு அளித்தார்கள். அவர்களுக்கு தறி மீதான வரி ரத்து செய்யப்பட்டது. எனவே நெசவாளர்கள் துயரத்தில் இருந்தபோது சோழ அலுவலர்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள் எனலாம். (South Indian inscriptions, vol 1, number 64)

அடியேன் saliya maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar