வெள்ளி, 5 ஜனவரி, 2024

சத்திரப்பட்டி தெற்குத்தெரு சாலியர்பொங்கல் திருவிழா



                                  சத்திரப்பட்டி தெற்கு தெரு கிழக்கு பகுதியில் அருள் புரிந்து வரும் கண்ணனூர் மாரியம்மன் கோவில் -  உக்ரசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஞாயிறு (17.04.2022) அன்று காலையில் தொடங்கியது. 

          முதல் நிகழ்ச்சியாக,  காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதி உலா வந்து அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்தனர். அன்று மாலையில் அக்னிசட்டி எடுத்து சத்திரப்பட்டி தெருக்களில் அம்மன் அருள் நிறைக்கப்பட்டது. 

               இரவு பக்தர்களுக்காக வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு,  சத்திரப்பட்டி புதுத்தெரு ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவில் அருகில் கொண்டு  சென்று கும்மிப் பாடல்களுடன் கொண்டாடப்பட்டது. (முன்னதாக முந்தைய பத்து நாட்களுக்கு முன்பு முளை தாண்டுதல் நிகழ்ச்சியுடன் முளைப்பாரிகள் வளர்ப்பதற்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன) 

                  புதுத் தெருவிலிருந்து கரகம் எடுக்கப்பட்டு,  தெற்கு தெரு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்மனின் விக்ரகம் அருகில் வைக்கப்பட்டது. அத்துடன் அன்றைய நாள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தன. 

                திங்கட்கிழமை (18.04.2022) காலையில் அக்னிச்சட்டி வீதி உலா வந்தது. மாலை சுமார் 4 மணி அளவில் முளைப்பாரிகள் வீதிகளில் வலம் வந்து துரைமடம் விநாயகர் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பக்தியுடன் கரைக்கப்பட்டன. 

      கரகம் மீண்டும் கோவிலிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு,  புதுத்தெரு பழனி ஆண்டவர் கோவில் அருகில் உள்ள கிணற்றில் பக்தியுடன் கரைக்கப்பட்டது.           இரவு அலங்கார சப்பரத்தில் அம்மன் ஊரிலுள்ள அனைத்து தெருக்களிலும் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.  செவ்வாய்க்கிழமை காலையில் சப்பரம் இறக்கியதுடன்  பொங்கல் திருவிழா நிறைவு பெற்றது.   செவ்வாய்க்கிழமை இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

நன்றி -  புகைப்படங்கள் உதவி:- வஷ்ய கணபதி டீ ஸ்டால் கண்ணன் மற்றும் அம்மன் புகைப்படம் தெற்குத் தெரு அனிதா 

- Saliya Maharishi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar