வெள்ளி, 5 ஜனவரி, 2024

நாடு முழுவதும் நெசவு இனங்கள் 1


மனிதன் உடை உடுக்க ஆரம்பித்த காலம் தொட்டு கைத்தறி நெசவு செய்பவர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் கைத்தறி நெசவு செய்து வந்த இனங்களை பற்றி கீழ்க்கண்டவாறு திரு. G.S.Ghurye - (சமூக மற்றும் மானிடவியல் பேராசிரியர்) - அவர்கள் தன்னுடைய 'Castes and Races in india' என்ற நூலில்
 எழுதியுள்ளார்கள்.

"பங்கர், சோரியா, தன்லி, கோஷ்டி, பட்வா, பட்டுநூல்காரர் மற்றும் சாலி என்பது நாட்டிலுள்ள முக்கியமான கைத்தறி நெசவாளர்களின் சாதிப் பெயர்கள் ஆகும். 

இதில் "பங்கர், சோரியா" என்ற இரண்டு ஜாதிகள் "நூல் இழைகளை ஒன்று சேர்த்தல்" என்ற அடிப்படையான அர்த்தத்தில் அமைந்தவை. மற்ற பெயர்கள் பட்டு ஆடை மற்றும் நூலிழை என்ற சொல்லின் சமஸ்கிருத மூலத்தில் இருந்து வந்துள்ளது. 'சாலி' என்ற மராட்டிய நெசவாளர் சமுதாயத்தில் 'ஆஹிர் மராத்தா' மற்றும் 'சம்பார்' என்ற உட்பிரிவுகளும் உண்டு. பத்மசாலியர் ஜாதியில் ஹிந்துக்களும் லிங்காயத்துகளும் உண்டு. 
திராவிட சார்புடைய நெசவாளர் சாதியான பார்க்கா என்ற சாதியிலும் கபிர்க்கா, சக்தகா என்ற முக்கிய உட்பிரிவுகளும் உண்டு. 
 வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரத்தில் சில பகுதிகளில் குடியிருந்து வந்த நெசவாளர்கள் அரசர்களால் ஆதரிக்கப்பட்டு வந்த 'பட்ட சாலியன்களில் இரு பிரிவினர்' என்றும் அவர்கள் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் சாலியர் என்ற நெசவாளர் வகுப்பை சேர்ந்த இரு பிரிவினர் என்றும்; அதாவது சாலியர்,  பட்ட சாலியர் என்ற பட்டாரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று மேலும் G.S.Ghurye குறிப்பிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar