புதன், 3 மே, 2017

நெசவும் நெசவாளரும்

இன்று தேவைக்காகவும் , பேராசைக்காகவும் போராடுவது, போராடுவது போல் நடிப்பது ஒரு விதமான நாகரிகம் ஆகிவிட்டது.

ஆனால், நூற்றாண்டு காலமாக கடினமாக உழைத்துக் கொண்டும், தங்கள் வாழ்க்கையை மிகவும் கடினமாக நடத்திவரும் சமூகம் நெசவாளர் சமூகம் ஆகும்.

தொழிலில் பல வகையான இடைஞ்சல்கள்... முக்கியமாக வருடத்தின் மழை, குளிர் காலங்களில் நெசவு செய்வது எவ்வளவு கடினம் என்பது நெய்பவர்களைக் கேட்டால் தான் தெரியும்.

உடல் உழைப்பும் எளிதாக பிரயோகிக்கும் அளவில் இருக்காது. கடினமாகவும் அதே நேரத்தில் மிகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டியது. ஏனென்றால் கடினமாக பலத்தை பிரயோகித்து நடந்துகொண்டால், நூல் கூட மொத்தமாக அறுந்துவிட வாய்ப்பு உள்ளது.

தொழில் நிரந்தரமாக கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை... ஏதோ அரசு கொடுக்கும் இலவச வேஷ்டி சேலை சமீபத்தில் தொழிலை சிறிது காப்பாற்றி வருகிறது.

சரி, கூலி போதுமான அளவு கிடைக்குமா என்றால்... சொன்னால் வெட்கக் கேடு. நாள் முழுதும் கடின உடலுழைப்புக்கு பிறகு கிடைப்பது வயிற்று பசிக்கு மட்டுமான அளவே...
அதில் சேமிப்பதோ, குழந்தைகளை உயர்ந்த கல்விக் கூடங்களில் படிக்க வைப்பதோ குதிரைக் கொம்பு போல.

நெசவாளரின் இறுதிக்காலம்

மிக மிக சிரமம் என்றால் நெசவாளரின் இறுதிக் காலமே... வாழும் நாளில் அதிக பாடுபட்டும் கைகளில் சேமிப்பு இல்லாத நிலை. இப்போது ஒரு 1000 ரூபாய் வருவதாக சொல்கிறார்கள் - பென்ஷனாக. (போதுமா ஒரு குடும்பத்துக்கு) சாப்பாட்டுக்கும் வறுமை. வயதான காலத்தில் வரும் உடல் உபாதைகளுக்கு வைத்தியமும் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை.

என்னதான் செய்ய??? அரசாங்கம் ஏதேனும் உதவிகள் செய்ய வேண்டும். கடனாக அல்ல.. உழைப்புக்கு பலனாக!!!

போலி விவசாய பண்ணையார்களுக்கு உதவியும் செய்து கடனும் தள்ளுபடி செய்வதை விட எங்களுக்கு உதவலாம்.

உலகத்துக்கே உடை கொடுத்து மானம் காத்தவர்கள் நாங்கள். கௌரவமாக உழைத்து பிழைக்க வழிவகை செய்ய வேண்டும்.

நெசவாளரைக் காப்பாற்றுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar