புதன், 3 மே, 2017

சத்திரப்பட்டியும் சாலியர்களும்

முன்குறிப்பு:-
சாலியர் முதலாக குடியேறிய பகுதி தெற்கில் ராமலிங்கபுரத்தை அடுத்து சமுசிகாபுரமே. அந்த காலகட்டத்தில் சத்திரப்பட்டி முதலில் உருவாகி இருக்கவில்லை.

கிபி 1600களின் இறுதி 1700களின் தொடக்கத்தில் மதுரையை தலைநகராக அமைத்து ராணி மங்கம்மாள் ஆட்சி செய்தார். அவர் பல சீர்திருத்தப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக சாலை அமைப்பு.

மதுரையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை மிக நீண்ட சாலையை நிறுவினார். அதே கால கட்டத்தில் மற்றொரு பிரிவாக சமுசிகாபுரத்தை கடந்து செல்லும் மங்கம்மாள் சாலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்பொழுது இருக்கும் வன்னியம்பட்டி சாலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வரை.



சாலை அமைக்கையில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அந்தப் பகுதியின் பெருந்தலைக்கட்டு கொண்ட இனத் தலைவர் மூலம் பேசி பணி தொடர்ந்தார். அதே கால கட்டத்தில் தான் மேற்படி சாலையின் கிழக்கே சத்திரப்பட்டி வளர்ந்து வந்தது. (பெயர் கிடையாது)

சாலை அமைத்த ராணி, சாலையின் ஓரங்களில் கால்நடைகள் குடிக்க தண்ணீர் தொட்டிகளையும், கடந்து செல்லும் யாத்திரீகர்கள் இளைப்பாற சாத்திரங்களையும் அமைத்தார்.

அதில் ஒரு சத்திரம் மங்கம்மாள் சாலையின் ஓரம் அமைந்த ஊரில் அமைக்கப்பட்டது. பிறகு இதன் காரணம் கொண்டு சத்திரப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டது. மேற்படி சத்திரம் அந்த இடத்தின் பெரிய இனக்குழுவான சாலியர் பொறுப்பில் இருந்ததாம். அதற்கு முன் சமுசிகாபுரம் என்றுதான் அழைக்கப்பட்டது.

பொதுவாக ஊர் பெயர் அமைக்கும் போது காரணப் பெயர் கொண்டுதான் வைக்கப்படும். பாதுகாப்பு காவல் கொண்ட ஊர் என்றால் "புரம்". படை வீரர்கள் அல்லது வேட்டை சமூகம் வாழும் ஊர் "பாளையம்". மிகச் சிறிய ஊராயின் "பட்டி" என முடியும்.

சத்திரம் இருந்த சிறிய ஊர் சத்திரப்பட்டி. பிறகு காலப்போக்கில் சத்திரம் மறைந்து விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar