புதன், 3 மே, 2017

சாலியர்களின் வேர்கள் 1

நண்பர்களே வணக்கம். முதலாவதாக இரண்டு விஷயங்கள்.

1. எங்கிருந்தோ தமிழகம் வந்து சேர்ந்த நமக்கு இருக்க இடம் கொடுத்து, உண்விட்டு வாழவைத்தது இந்தத் தமிழ் மண்ணே. அந்த அளவில் இம்மண்ணையும், மக்களையும் வணங்குகிறேன்!!! மதிக்கிறேன்!! ஆனால் நம் மூதாதையர் தமிழர்கள் அல்ல என்பதே நமது சரித்திரம் காட்டும் நிஜம்.

2. நாம் ரிஷிவழி வந்தவர்கள். எப்படியெனில் நாம் ஏற்கனவே சாலியர், பத்மசாலியர் தோற்றம் கட்டுரையில் பார்த்தபடி...

அதுபற்றி ஒரு முன்னோட்டம்..
முன்னோர்களான ரிஷிகள் விவரத்தை மட்டும் முதலில் பார்ப்போம். ரிஷிபத்தினிகள் பற்றி காண மேற்படி கட்டுரையை காணவும்.

1. பகவான் நாராயணன்
2. பிரம்மா
3. பிருகு மஹரிஷி
4. தாத்ரு, விதாத்ரு, லக்ஷ்மிதேவி
5. விதாத்ருவின் மகனான மிருகண்டு மஹரிஷி
6. மார்கண்டேய மஹரிஷி
7. பாவன ரிஷி
8. பாவனரிஷியின் 101 புத்திரர்கள்.
9. பிற்பாடு தோன்றிய சாலிய மஹரிஷி



இதுதான் நமது வம்ச சங்கிலி. நம் மூதாதையர் இந்த ரிஷிகளைப் போற்றியிருக்கிறார்கள்.
வாழ்ந்த இடங்களில் எல்லாம் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை பற்றி படிப்படியாக பார்ப்போமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar