புதன், 3 மே, 2017

அனுபவம்

ஒரு சுவையான அனுபவத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். (உன் அனுபவம் எங்களுக்கு எதற்கு ? என்கிறீர்களா? காரணம் இருக்கிறது)

தெலங்கானாவில் ஒரு மாவட்டத் தலைநகரில் ....
சுமார் நான்கு நாட்கள் முன்பு ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். (வழக்கம் போல ட்ரெய்ன் தாமதம்). ஒரு தமிழ் குடும்பம். திருவாரூரில் பிறந்து , தெலங்கானாவில் செட்டில் ஆனவர்கள். அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். முதலில் தெலுங்கில். (பாவம்..) பிறகு நான் தமிழென்று தெரிந்து கொண்டு தமிழில் ஆரம்பித்தோம்.

அதை இதை பேசி கடைசியில் ஜாதியில் வந்து சேர்ந்தது. என்னை

"என்ன ஜாதி" என்று கேட்டார்

"நான் ஷாலியர் "என்று சொல்ல...

"அட அப்பிடியா!!!! இங்கும் நிறைய இருக்கிறார்களே...தெரியுமா ?"

"தெரியும் ஸார்."

"சரி சரி. #நீங்கல்லாம் அசைவம் சாப்பிட மாட்டேங்கல்ல..?"

"சாப்பிட மாட்டேன்". (நம்புங்கள் நண்பர்களே... நான் சுத்த சைவனே)

"வெரிகுட் வெரிகுட்... இங்கேயும் அப்படித்தான். ரொம்ப கட்டுப்பாடு."

பார்த்தீர்களா நண்பர்களே... யாரோ ஒருவருக்குத் தெரிகிறது- நாம் பிராமணரென்று. ஆனால் நம்மில்????

சாலியனாய் பெருமைப்படுகிறேன்.

சாலியனாய் படைத்ததற்கு பகவானுக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar