ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சாலியர்களின் பட்டம்

முன்குறிப்பு :- நாம் பிராமணர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டு படியுங்கள்.




நண்பர்களே...நமது இனத்தின் வேர்கள் எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டியது உள்ளது. சொன்னால் கோவிச்சிக்கக் கூடாது.

நமது இனத்தவர்கள் சில பட்டங்களை கொண்டு அழைக்கப்படுகிறார்கள். நம்மில் பலரும் அதை விரும்புகிறோம் - கேவலம் என்று புரியாமலேயே..

மூப்பனார் :- மூப்பர் என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு முதியோர், மூத்தவர், காரணவர் என்ற அர்த்தத்தால் சொல்லப்படும். நமது இனம் இங்கே குடிபெயர்ந்து வந்த போது அந்தக் குழுவின் மூத்த குடி ஆள் மூப்பர் என அழைக்கப்பட்டார். பிறகு அதையே மரியாதையாக மூப்பனார் என மாறியது.

இயல்பாகவே நமக்கு ( சாலியருக்கு ) மூப்பனார் என்ற பட்டம் இருந்ததே இல்லை.
வேறு பட்டங்கள் இருந்தது. இருக்கிறது.

பண்ணாடி :- இதை நாம் சொல்லவே கூடாது. மற்றவர்கள் சொல்ல அனுமதிக்கவும் கூடாது. இது பெரும்பாலான முதலாளி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய பண்ணை நிலங்கள் வைத்திருந்தவர்கள் பண்ணாடி என்று அழைக்கப்பட்டனர்.
அது நமக்குப் பெருமை அல்ல. முன்குறிப்பை மறுபடி ஒருமுறை படிக்கவும்.

சரி.... அப்படியானால் நமக்கான பட்டம்தான் என்ன ?
பெரிய புராணத்தில் நமக்கு "அறுவையர்" என்ற தொழில்சார்ந்த பட்டம் இருக்கிறது. என்றால் துணியை நெய்து அறுப்பது. "அடவியார்" என்றும் ஒரு பட்டம் உள்ளது. ஆந்திராவில் பத்ம பிராமணர்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. மூப்பனார், பண்ணாடி என்பது நமக்கு பெருமை அல்ல. சொல்லப்போனால் பண்ணாடி என்பது நமக்கு சிறுமைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar