செவ்வாய், 4 அக்டோபர், 2016

நேச நாயனார்



காம்பீலி என்னும் வளமிக்க பூமியில் நேச நாயனார் பிறந்து வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு கோவணமும் , வேஷ்டியும் தானே நெய்து கொடுத்தார். சாலியரல்லவா...!


சிறிது சிறிதாக சிவ உபாசனை செய்து முற்பிறப்பும் அறிந்தார்.




ஹம்பியில் உள்ள விருபாக்ஷீஷ்வரரை உபாசித்து வழிபட்டு முக்தி அடைந்தார்.

காம்பீலி நகரம் இன்றைய கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹம்பிக்கு அருகில் உள்ளது.

பெல்லாரி போன்ற மாவட்டங்களில் இன்றளவும் பத்மசாலியர் வாழ்ந்து வருவது இதற்கு சான்றாகும்.

நமது மாயவரம் கொரநாட்டில் புணுகீஸ்வரர் ஆலயத்தில் இப்போதும் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் நேச நாயனாருக்கு நமது மக்களால் குருபூஜை கொடுக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நமது சாலிய மக்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இதே போன்ற வழிபாட்டை குருபூஜையின் போது கொண்டுவந்தால் இன்னும் நமது இனத்துக்கு கௌரவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar