வெள்ளி, 14 அக்டோபர், 2016

பத்மாவதி தாயாரும் - சாலியரும்

முன்னதாக சாலியர், பத்மசாலியர் தோற்றம் என்ற பதிவில் நம் குல பிருகு மஹரிஷியின் மகளான லக்ஷ்மிதேவியை பகவான் நாராயணன் மணந்ததைப் பற்றி எழுதியது உங்களுக்கு நினைவிருக்கும். அதன் அனுபந்தம் இப்பதிவு.

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக இருக்கும் எம்பெருமான் ஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்வாமியின் துணைவியான திருச்சானூர் பத்மாவதித் தாயார் பத்மசாலியர் பரம்பரையில் தோன்றியவரே. இவரே மகாலக்ஷ்மியின் அவதாரம். இதற்கான ஆதாரம் திருமலை திருப்பதி தேவஸ்தான ஸ்தல புராணங்களிலும், தாள்ளப்பாக்கம் அன்னமாச்சாரியார் பரம்பரை வரலாற்றிலும் காணக் கிடைக்கிறது.


இன்றளவும் ஆந்திரா, கர்நாடக, தமிழ்நாடு பத்ம சாலியர்களின் குலதெய்வம் பத்மாவதி தாயாரே. முதல் வழிபாடு இவருகும், பாவனரிஷிக்கும்(நினைவிருக்கிறதா ?).

பத்மாவதித்தாயாரின் கோவிலை திருச்சானூரில் பத்ம சாலியரே கட்டியதாக சொல்லப் படுகிறது.

ஆந்திரா, கர்நாடக பகுதிகளில் இன்றளவும் பத்ம சாலியர்கள், பத்ம ப்ராமிண் (பத்ம பிராமணர்) என்றே அழைக்கப்படுகின்றனர்.

எனவே நமது குலதெய்வமான ஸ்ரீ பத்மாவதி தாயாரை வணங்கி அருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar