வெள்ளி, 21 அக்டோபர், 2016

கேரள சாலியர்கள்

கேரளாவில் கண்ணூர், இரிஞ்ஞாலக்குடா, காசர்கோடு பகுதிகளில் சாலியர்கள், தமிழகத்தின் மாயவரத்திலிருந்து மன்னர் சேரமான் பெருமாள் காலத்தில் குடியேறினார்கள்.
இன்றளவும் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.

கி.பி 1810 ஆம் ஆண்டு உம்மினித்தம்பி என்பவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த போது திருவனந்தபுரத்துக்கும், நெய்யாற்றின்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் குடியேறினர். திருவிதாங்கூர் மன்னரின் நினைவாக (பலராமவர்மா)அவ்வூர் பலராமபுரம் என்ற பெயரில் இப்போதும் அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சாலியர்கள் நெய்யும் ஆடைகள் இப்போதும் புகழ்பெற்றவை ஆகும்.

கி.பி 1835 இல் மன்னர் சேரமான் பதவியேற்ற போது சாலியர்கள் (*பட்டாரியர்கள்*)நெய்து கொடுத்த பட்டாடையால் மகிழ்ந்த மன்னன் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் காலை பூஜையின் பிரசாதம் இவர்களுக்கே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.



#அனுபந்தம் :- *பட்டாரியர்* என்பதும் சாலியரே ஆகும். இன்னொரு பிரிவாக இதைக்கொள்ளலாம். பெயர் எப்படி வந்ததென்றால் பட்டு சாலியர் - பட்ட சாலியர் = பட்டாரியர் என திரிந்து அல்லது மருவி வந்தது.

அரசாங்க கெஸட்டுகளில் இப்போதும்
சாலியர்
பட்டாரியர்
கைக்கோளர் என்றே கூறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar