சனி, 22 அக்டோபர், 2016

கேரள சாலியர்கள் 2




கேரளத்தின் கடவில் பகவதி ஆலய வரலாறு சாலியர்களைப் பற்றி பேசுகிறது.

கங்கை கரையில் உள்ள காசி நகரத்திலிருந்து சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன் திரிப்தா ஆண்டு பஞ்சத்தால் மக்கள் தெற்கு நோக்கி வந்தனர். (ஆக நமது பூர்வீகம் வட இந்தியா என்பது ஊர்ஜிதம் ஆகிறது) அதில் பிரிவு பிரிவாக குஜராத், பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா பகுதிகளில் குடியேறினர். அந்தந்த பகுதி மொழியே நம் தாய் மொழி ஆயிற்று.

ஆந்திராவில் இருந்து புறப்பட்டு சில ஆண்டுகள் கழித்து நம் மக்கள் சென்னையை உருவாக்கியதும் முன்பு பார்த்தோம் அல்லவா ?
பிறகு காஞ்சிபுரத்தில் குடியேறினர்.

விஜயநகரம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், ராஜமுந்திரி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை சோழநாராயணன் பட் என்பவர் ஆட்சி செய்தார். இவர் சேர வம்சாவழி அரசர். நம்பூதிரிகள் ஆலோசனைப்படி அவர் சிறந்த வைபவங்களில் அணியத்தக்க ஆடைகளை நெய்வதற்காக காஞ்சியிலிருந்து சாலியர்களை அழைத்து வந்து கேரளாவில் குடியமத்தினார்.

முன்னதாக கொஞ்சம் சாலியர்கள் மாயவரத்திலிருந்து கேரளாவின் பிற பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

காஞ்சிபுரத்தில் சாலியர்கள் ஒவ்வொரு பிரிவாக வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அதில் மன்னர் சோழநாராயணன் பட் மூலம் கேரளாவில் குடியேற்றப்பட்ட சாலியர்கள் தங்கள் வழிபட்ட தேவி (மகாலட்சுமி) சிலையை கடலில் போட்டுவிட்டனர்.


பிறகு கேரளாவின் கொச்சின் பகுதியில் குடியேறிய சாலியர்கள், பட்டாரியர் என்றழைக்கப்பட்டனர். அதற்கு வடபுரத்தில் (கண்ணூர், கோழிக்கோடு, காசர்கோடு) சாலியர் எனவும், தென்புறத்தில் (திருவாங்கூர்) தேவாங்கர் எனவும் அழைக்கப்பட்டனர்.

கடலில் போடப்பட்ட தேவி மகாலட்சுமிக்கு கோவில் எழுப்ப கொச்சின் சாலியர்கள் முயன்ற சமயத்தில் பள்ளிபுரம் கடலில் இருந்து முதலையால் (மகாலட்சுமி வாகனம்) தேவியின் சிலை கரையேற்றப்பட்டது. அந்த இடம் இன்றும் புனித இடமாக கருதப்பட்டு பராமரிக்கப் படுகிறது.

பிறகு ஆழப்புழாவின் சேர்த்தலை பகுதியில் கடவில் பகவதி மகாலட்சுமி கோவில் எழுப்பப்பட்டது. முதலை சிலையும் வைக்கப்பட்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar