சனி, 24 செப்டம்பர், 2016

சாலியர், பத்மசாலியர் தோற்றம்

உலகத்தின் ஆதியில் பஹவான் நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இருக்கும் சமயத்தில் தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து (தொப்புளில் இருந்து) பிரம்மதேவரை படைத்தார்.

பிரம்மதேவர் தனக்கு நிகரான ஒன்பது ரிஷிகளைப் படைத்தார். அவர்களுல் ஒருவர் பிருகு மஹரிஷி. இவரே பத்மசாலியர்களின் மூல புருஷர்.

பிருகு மகரிஷியின் மனைவி ஷாதினி. இவர்களுக்கு மூன்று புத்திரர்கள். அவர்கள் தாத்ரு, விதாத்ரு மற்றும் லக்ஷ்மி தேவி.

விதாத்ரு, நியதி என்பவரை மணந்தார். லக்ஷ்மிதேவி மஹாவிஷ்ணுவை மணந்தார். (தாத்ருவை பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை)

விதாத்ரு - நியதி தம்பதியினரின் மகனாக ம்ருகண்டு மஹரிஷி பிறந்தார். ம்ருகண்டு மஹரிஷி, முத்கல முனிவரின் மகளான மருத்துவதியை மணந்தார்.

ம்ருகண்டு - மருத்துவதி தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து மார்க்கண்டேய மஹரிஷி தோன்றினார்.

அல்பாயுளாக தோன்றிய மார்கண்டேயரை நோக்கி, உரிய காலத்தில் எமதர்மர் பாசக் கயிறை வீசினார். மார்க்கண்டேயர் ம்ருத்துஞ்சய மந்திரத்தை சொல்லி சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டார்.


சிவபெருமான் நேரில் தோன்றி, மார்கண்டேயருக்கு தீர்காயுள் வழங்கி "சிரஞ்சீவி ஆகு" என்று வரம் தந்தார்.

அந்த காலகட்டத்தில் காலபாசுரன் என்ற அசுரனின் தொந்தரவு அதிகரித்து வந்தது. இவனை அழிப்பதற்கு மார்கண்டேயரின் புதல்வரால் மட்டுமே முடியும் என்று யாகபுருஷன் மூலம் தெரியவந்தது.

மார்கண்டேயர் பிரம்மச்சாரி. உலக நன்மைக்காக திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டார். பின்னர் அக்னிதேவரின் மகளான பூம்ரவதியுடன் மார்கண்டேயருக்கு திருமணம் ஆயிற்று.

இவர்களின் மகனாக பாவனரிஷி தோன்றினார். இதே காலகட்டத்தில் பிரம்மா தனது படைப்பு தொழிலால் ஏராளமானவர்களை படைத்தார். தோன்றியவர்கள் அனைவரும் வஸ்திரத்துக்கு சிரமப்பட்டனர். நாராயணன் பாவனரிஷிக்கு வஸ்திரம் நெய்யும் கலையை போதித்தார். நாராயணர் பாவனரிஷிக்கு தனது நாபி கமலத்தில் உள்ள தாமரை தண்டினை கொடுத்து அதில் வரும் ஷாலியை {நூலால்} தேவாதி தேவர்களுக்கு வஸ்திரம் இழைக்க சொன்னார்

"உன்மூலமாக பிறப்பவர்கள் அனைவரும் என்னவரே... நீங்கள் உலகத்துக்கு வஸ்திரம் வழங்கி மானம் காப்பீர்கள்.பத்ம ஷாலியர் என்று அழைக்கப் படுவீர்கள்" என்று நாராயணன் வரமளித்தார்.
ஷாலி என்றால் நூல்.
பத்மத்தின் ஷாலி {நூலில் } இருந்து வஸ்திரம் இழைத்ததால் பத்மஷாலியர் எனப்பட்டனர்.

பாவனரிஷி சூரியதேவனின் மகளாகிய பத்ராவதியை மணந்தார். மார்கண்டேயர் சப்தரிஷி மண்டலத்தில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னினார்.
மின்னிக் கொண்டிருக்கிறார். பதினெட்டு புராணங்களில் மார்கண்டேய புராணமும் ஒன்று. சிவனை நோக்கி தவம் செய்து சிவலோகம் சென்றார்.

பத்மசாலிய மூல புருஷரான பாவனரிஷி தேவர்களுக்கு வஸ்திரம் நெய்து கொடுத்தார்.

பாவன ரிஷி - பத்ராவதி தம்பதியினருக்கு 101 குழந்தைகள்.
அந்த நூற்றிஒருவர்களே பத்மசாலியர்களின் கோத்திர நாயகர்கள்.

பாவன ரிஷி நாராயணிடம் ஐக்கியமாகி பாவநாராயண் என்றழைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar