ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

சத்திரப்பட்டி சாலியர் முளைக்கொட்டுத் திருவிழா



பல நூற்றாண்டுகளாக நமது சத்திரப்பட்டியில் கொண்டாடப்பட்டு வரும் முளைக்கொட்டு திருவிழா இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக ஆடி 13 (29.7.18) அன்று முளைத்தாண்டுதல் என்னும் பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முளைப்பாரி வளர்ப்பு நிகழ்ச்சி பக்தியுடன் தொடங்கிற்று. அதைத் தொடர்ந்து அடுத்து வந்த நாட்களில் சத்திரப்பட்டியின் நான்கு தெருக்களிலும் முளைக்கொட்டு வாசலின் முன்பு தாய்மார்களின் கும்மிப் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

7.8.2018 அன்று முளைக்கொட்டு திருவிழா இனிதே துவங்கியது. அன்றிரவு அம்மன் சப்பர வீதியுலா ஒவ்வொரு தெருவின் சார்பிலும், அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. முளைக்கொட்டு விழாவின் அனைத்து தெரு மின் விளக்கு உபயம் சத்திரப்பட்டி ஆறுமுகா குரூப் முதலாளி உயர்திரு ஆறுமுகம்  ஐயா அவர்கள். 

அதைத் தொடர்ந்து மறுநாள் காலை முளைப்பாரி வீதி உலா வந்து அந்தந்தத் தெருக்களில் பந்தலில் அம்மன் முன்  சமர்ப்பிக்கப்பட்டு வணங்கப்பட்டது.  தொடந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து பல்வேறு நேர்த்திக்கடன்களும் மக்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

       அன்று மாலை பேண்ட் வாத்திய கச்சேரியுடன் முளைப்பாரி விதி உலாவந்து சத்திரப்பட்டி துரைமடம் விநாயகர் கோவில் அருகிலுள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது.  அன்று முழுதும் சத்திரப்பட்டியில் விழாவைக் காணவரும் பக்தர்களுக்காக சதுரகிரி காளிமுத்து சுவாமிகள் ஆசிரமத்தின் மூலம் அன்னதானமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்றிரவு அம்மன் சப்பர வீதி உலா நடைபெற்றது. 

மறுநாள் வியாழனன்று இரவு நடுத்தெரு விழாப்பந்தலில் வைத்து நமது ஏழூர் சாலியர் மகாஜன சங்கத்தின் சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இரவு அம்மன் அலங்காரச் சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

-சாலியர் மலர் பத்திரிக்கைக்காக அடியேன் எழுதிய கட்டுரை. 26 ஆகஸ்ட் 2018 இல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar