வியாழன், 19 ஜனவரி, 2017

சாலியரும் பாரம்பரிய மீட்பும்


(கீழ்கண்ட பதிவு நமது பாரம்பரிய கலாச்சார பழக்கங்களையும், நமது பெருமையும் மதிப்பவர்களுக்கு. சாலியர் என்பதில் பெருமிதம் கொள்ளும் நண்பர்களுக்கானது. மற்றவர்கள் இதைப் படிக்காமல் கடந்து சென்று விடுங்கள்)

நமது பழங்கால கலாச்சாரத்தையும், நாம் ரிஷி குலத்தில் வந்தவர்கள் என்பதயும் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ள ஒருவழி இருக்கிறது. அதுதான் பூணூல் அணிவது.

ஆம்!!!

நமது உணர்வுகளை வலுவாக்க அதுதான் சிறந்த வழியாக இருக்கும். நிற்க...

இது துவங்கி ஒருசில விளக்கங்கள்.

பூணூல் அணிவது உபநயனம் என்ற பெயரில் நமது இனத்தில் நடத்தப்பட்டு வந்ததது. இப்போதும் சில ஊர்களில் (மாயவரம், மணமேடு, வடசேரி) நடைபெற்று வருகிறது.

நமது ஏழூர் சாலியர் வகைகளில் இப்பழக்கம் கைவிடப்பட்டு குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகள் ஆயிற்று.

இது சம்பந்தமான சிந்தனை எனக்கு வரத்துவங்கிய கட்டங்களில் பல சாஸ்திர விற்பன்னர்களை அணுகினேன்.
ஒரு சமயம் ப்ரும்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சொல்லும்போது "ஒரு குடும்பத்தில் உபநயனம் வழி வழியாக நடத்தப்பட வேண்டியது. ஒருவேளை தகப்பனுக்கு அந்தச் செயல் விடுபட்டு விட்டால் அவனுடைய மகனுக்கு இல்லை என்பதல்ல. (தகப்பனே காயத்திரி போன்ற மந்திர உபதேசம் செய்து, பூணூல் அணிவிக்கவேண்டும். எனவேதான் இப்படி சொல்கிறார்) குருவே எல்லாமாக இருந்து அவனுக்கு பூணூல் அணிவிக்க வேண்டும். அவனுக்கான அணியும் உரிமை எப்போதும் மறுக்கப் படக் கூடாது" என்று குறிப்பிட்டார்.

விஷயத்துக்கு வருவோம்...

நாம் மூன்று தலைமுறையாக பூணூல் அணியவில்லை. அதற்காக நமது உரிமை போய்விட்டதென்பதல்ல. நாம் அணியலாம். அணிந்துகொள்ள வேண்டும்.

நமது இனத்தவர் வாழும் ஊர்களில் நிறைய நண்பர்கள் அணிய விரும்பினால் சமஷ்டி உபநயனமாக (நிறைய பேர்களுக்கு ஒரே நேரத்தில் அணிவது) செய்யலாம். ஒரு பொது இடத்தில் நடத்த வேண்டும். இப்படியான ஒரு ஏற்பாட்டை செய்வதானால் நான்கூட என்னால் முடிந்த ஆலோசனை உதவி செய்யலாம். (உன் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்கிறீர்களா.... ஓக்கே :D )

பூணூல் சம்பந்தமாக சில பொது விதிமுறைகள் பற்றி சொல்ல வேண்டி இருக்கிறது. அதை பிறகு சந்தர்ப்பம் வாய்த்தால் பார்ப்போம்.

வாருங்கள் நண்பர்களே. நமது பாரம்பரியத்தை மீட்டேடுப்போம்!

இழந்த பெருமையை மீட்போம்!!

சாலியராய் இணைவோம்!!!

1 கருத்து:

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar