வியாழன், 19 ஜனவரி, 2017

இன ஒற்றுமை.

நமது இன ஒற்றுமைக்கும், பாரம்பரியத்தை மீட்டெடுக்க சில வழிகள் உள்ளன.

1. நமது நேச நாயனார் குரு பூஜையை நம் இனத்தவர் வாழும் இடங்களில் எல்லாம் கட்டாயம் கொண்டாடப் படவேண்டும்

அவரை மக்களின் மனதில் எடுத்துச் செல்ல, பதிய வைக்க எளிய வழி , அவரது குருபூஜை அன்று அவர் படத்தை வைத்து பூஜை செய்து, புளியோதரை போன்ற ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கப் பட வேண்டும்.

நேச நாயனார் குருபூஜை பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரம்.





2. நமது மக்களுக்கு ஒன்றிய, பிரிக்கவே முடியாத விஷயம் இறை வழிபாடு.

நம் மக்கள் இருக்கும் எல்லா இடத்திலும் கண்டிப்பாக கோவில்கள் இருக்கும். அவற்றிலே சாலிய_மஹரிஷியின் படத்தை சுவற்றில் பெரிதாக வைத்துவிட்டால் நாம் ரிஷிவழி வந்த பிராமணர்கள் என்பது நினைவுக்கு வந்துகொண்டே இருக்குமே...

எல்லா நமது கோவில்களிலும் இது செய்யலாம்.
தெரியாத மக்கள் யாரென்று
கேட்டு ..அதற்கு சொல்லி... அப்படியே வளர்ந்துவிடும் மாற்றம்.

அதற்கு என்னால் முடிந்த சிறு உதவியாக வீரராகவப் பெருமாள் கரத்தின் கீழே அமர்ந்த சாலிகோத்திர மகரிஷியின் படத்தை எடுத்து போட்டிருக்கிறேன். இதை போட்டோவாக்கி பயன் படுத்திக் கொள்ள முடியும். அல்லது உங்கள் விருப்பம். நமது இளைஞர்கள் நினைத்தால் முடியும்.

வாழ்க நமது ப்ராமணர்க்கு நிகரான சாலியர் குலம்.

கீழே படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

saliyar,pathma saliyar , saliyamaharishi, nesanayanar