புதன், 3 மே, 2017

சாலியர்களின் வேர்கள் 1

நண்பர்களே வணக்கம். முதலாவதாக இரண்டு விஷயங்கள்.

1. எங்கிருந்தோ தமிழகம் வந்து சேர்ந்த நமக்கு இருக்க இடம் கொடுத்து, உண்விட்டு வாழவைத்தது இந்தத் தமிழ் மண்ணே. அந்த அளவில் இம்மண்ணையும், மக்களையும் வணங்குகிறேன்!!! மதிக்கிறேன்!! ஆனால் நம் மூதாதையர் தமிழர்கள் அல்ல என்பதே நமது சரித்திரம் காட்டும் நிஜம்.

2. நாம் ரிஷிவழி வந்தவர்கள். எப்படியெனில் நாம் ஏற்கனவே சாலியர், பத்மசாலியர் தோற்றம் கட்டுரையில் பார்த்தபடி...

அதுபற்றி ஒரு முன்னோட்டம்..
முன்னோர்களான ரிஷிகள் விவரத்தை மட்டும் முதலில் பார்ப்போம். ரிஷிபத்தினிகள் பற்றி காண மேற்படி கட்டுரையை காணவும்.

1. பகவான் நாராயணன்
2. பிரம்மா
3. பிருகு மஹரிஷி
4. தாத்ரு, விதாத்ரு, லக்ஷ்மிதேவி
5. விதாத்ருவின் மகனான மிருகண்டு மஹரிஷி
6. மார்கண்டேய மஹரிஷி
7. பாவன ரிஷி
8. பாவனரிஷியின் 101 புத்திரர்கள்.
9. பிற்பாடு தோன்றிய சாலிய மஹரிஷி



இதுதான் நமது வம்ச சங்கிலி. நம் மூதாதையர் இந்த ரிஷிகளைப் போற்றியிருக்கிறார்கள்.
வாழ்ந்த இடங்களில் எல்லாம் இந்தச் சுவடுகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை பற்றி படிப்படியாக பார்ப்போமா ?

இலக்கியத்தில் சாலி

இலக்கியத்தில் பத்துப்பாட்டு நூல் வரிசையில் ஒன்றான பொருநராற்றுப்படையில், உயர்ந்த வகை நெல்லைல் குறிக்கும் போது சாலி நெல் என்றே குறிக்கப்பட்டுள்ளது.

இதோ 👇👇👇👇

சோழன் கரிகாலன் ‘சாலி நெல்லின் சிறைகொள் வேலியாயிரம்.

நெசவின் பெருமை

திருக்கை வழக்கம்’ என்னும் நூல் உழவுத்தொழிலை ‘வெய்யத்தொழில்’ (கொடுந்தொழில்) என்றும்,

நெய்தற் தொழிலை ‘தூய தொழில்’ என்றும் கூறுகிறது.



சாலியர் பெருமை

"ஊடுபாவோட்டும் சாலியனும் பாவோட்டாமல் இடைவிட்டு ஓடி வந்தான்” என்று புத்தர் நடந்து வருவதான காட்சியில் ஆசியஜோதியில் கூறப்பட்டுள்ளது .

அனுபவம்

ஒரு சுவையான அனுபவத்தை சொல்லலாம் என்று நினைக்கிறேன். (உன் அனுபவம் எங்களுக்கு எதற்கு ? என்கிறீர்களா? காரணம் இருக்கிறது)

தெலங்கானாவில் ஒரு மாவட்டத் தலைநகரில் ....
சுமார் நான்கு நாட்கள் முன்பு ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். (வழக்கம் போல ட்ரெய்ன் தாமதம்). ஒரு தமிழ் குடும்பம். திருவாரூரில் பிறந்து , தெலங்கானாவில் செட்டில் ஆனவர்கள். அவர் என்னிடம் பேச ஆரம்பித்தார். முதலில் தெலுங்கில். (பாவம்..) பிறகு நான் தமிழென்று தெரிந்து கொண்டு தமிழில் ஆரம்பித்தோம்.

அதை இதை பேசி கடைசியில் ஜாதியில் வந்து சேர்ந்தது. என்னை

"என்ன ஜாதி" என்று கேட்டார்

"நான் ஷாலியர் "என்று சொல்ல...

"அட அப்பிடியா!!!! இங்கும் நிறைய இருக்கிறார்களே...தெரியுமா ?"

"தெரியும் ஸார்."

"சரி சரி. #நீங்கல்லாம் அசைவம் சாப்பிட மாட்டேங்கல்ல..?"

"சாப்பிட மாட்டேன்". (நம்புங்கள் நண்பர்களே... நான் சுத்த சைவனே)

"வெரிகுட் வெரிகுட்... இங்கேயும் அப்படித்தான். ரொம்ப கட்டுப்பாடு."

பார்த்தீர்களா நண்பர்களே... யாரோ ஒருவருக்குத் தெரிகிறது- நாம் பிராமணரென்று. ஆனால் நம்மில்????

சாலியனாய் பெருமைப்படுகிறேன்.

சாலியனாய் படைத்ததற்கு பகவானுக்கு நன்றி.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சாலியர்களின் பட்டம்

முன்குறிப்பு :- நாம் பிராமணர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டு படியுங்கள்.




நண்பர்களே...நமது இனத்தின் வேர்கள் எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டியது உள்ளது. சொன்னால் கோவிச்சிக்கக் கூடாது.

நமது இனத்தவர்கள் சில பட்டங்களை கொண்டு அழைக்கப்படுகிறார்கள். நம்மில் பலரும் அதை விரும்புகிறோம் - கேவலம் என்று புரியாமலேயே..

மூப்பனார் :- மூப்பர் என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு முதியோர், மூத்தவர், காரணவர் என்ற அர்த்தத்தால் சொல்லப்படும். நமது இனம் இங்கே குடிபெயர்ந்து வந்த போது அந்தக் குழுவின் மூத்த குடி ஆள் மூப்பர் என அழைக்கப்பட்டார். பிறகு அதையே மரியாதையாக மூப்பனார் என மாறியது.

இயல்பாகவே நமக்கு ( சாலியருக்கு ) மூப்பனார் என்ற பட்டம் இருந்ததே இல்லை.
வேறு பட்டங்கள் இருந்தது. இருக்கிறது.

பண்ணாடி :- இதை நாம் சொல்லவே கூடாது. மற்றவர்கள் சொல்ல அனுமதிக்கவும் கூடாது. இது பெரும்பாலான முதலாளி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய பண்ணை நிலங்கள் வைத்திருந்தவர்கள் பண்ணாடி என்று அழைக்கப்பட்டனர்.
அது நமக்குப் பெருமை அல்ல. முன்குறிப்பை மறுபடி ஒருமுறை படிக்கவும்.

சரி.... அப்படியானால் நமக்கான பட்டம்தான் என்ன ?
பெரிய புராணத்தில் நமக்கு "அறுவையர்" என்ற தொழில்சார்ந்த பட்டம் இருக்கிறது. என்றால் துணியை நெய்து அறுப்பது. "அடவியார்" என்றும் ஒரு பட்டம் உள்ளது. ஆந்திராவில் பத்ம பிராமணர்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. மூப்பனார், பண்ணாடி என்பது நமக்கு பெருமை அல்ல. சொல்லப்போனால் பண்ணாடி என்பது நமக்கு சிறுமைதான்.

வியாழன், 19 ஜனவரி, 2017

சாலிய மஹரிஷி

Print எடுத்து சாலிய மஹரிஷி படத்தை கோவிலில் மாட்டும் அளவுக்கு தரலாமா என்று சில நண்பர்கள் இன்பாக்ஸ் இல் கேட்டார்கள். என் போட்டோஷாப் நண்பர் ஒருவரிடம் கேட்டு , அவர் இப்படி கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் சரிவருமான்னு பாருங்க.

முதுமொழியில் நெசவு

செய்யும் தொழிலை சீர்தூக்கி பார்க்கும்கால் நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை.