சாலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜனவரி, 2024

பூதப்பாண்டி சாலியர் கல்வெட்டு


நாஞ்சில் நாட்டின்(நாகர்கோவில்) பூதப்பாண்டியில் இருக்கும் பாண்டீஸ்வர உடைய நாயனார் கோயிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கும் விஷயம்(கல்வெட்டில் மலையாள வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது) இது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே சாலியர் வடசேரி பகுதியில் வாழ்ந்து வந்ததற்கு சாட்சி :- 


வரி 1 முதல் 11 :- கொல்லம் ஆண்டு 867 தை மாதம் 19ஆம் தேதி இந்த சாசனம் நாஞ்சில்நாட்டு பூதப்பாண்டியில் இருக்கும் பூதப்பாண்டீஸ்வர உடைய நாயனார், ஸ்ரீ பண்டாரத்தில் (அரசரின் கோவில்) நிதி நிர்வாகத்தில் (ரவிவர்மா , 1684 முதல் 1717 வரை) இருந்து அரசர் அவ்வூரில் உள்ள சாலிய நகரத்தாருக்கு கல்வெட்டு விட்டுக்கொடுத்த சலுகைகள். 

வரி 12 முதல் 20 வரை:- அரசரின் ஆணைப்படி சாலியர்கள் வடசேரியில் அவர்களுக்காக இருக்கும் நிலங்களில் குடியிருக்கவும், நகரத்தின் மேற்கு பகுதியில் (உபத்திரம் கொண்டு) வீடுகளை இழந்த சாலியர்களுக்கும் அந்த சேரியில் குடியமர அனுமதிக்கப்படும்.

வரி 21 முதல் 34 வரை:- சாலியர் தெருக்களில் யாராவது தவறு செய்தால், சாலியக்குடியில் அவர்களுக்கு நெல், வித்து(விதை), பாத்திர பண்டம், மாடு, கன்று, நூல் ,பாவு முதலியவைகள் பணயம் எடுக்கும் உரிமை தடை செய்யப்படும். தவறு செய்பவர்கள் (மறித்து) பிடித்து வரப்படுவார்கள். அவர்கள் பிறர் காதை அறுத்த தவறுக்குரிய தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

வரி 35 முதல் 41 வரை:- அந்த தவறுக்கு அவர்கள் சரியான ஈடு செய்தபின் (சாலியர் தெருக்களில்) அமைதியாக வாழ அனுமதிக்கப்படுவார்கள். 

வரி64 முதல் 75 வரை:- கல்லிலும் செம்பிலும் வெட்டி இருக்கும் இந்த சாசனம், வானில் சந்திரன் நட்சத்திரங்கள் இருக்கும் காலம் வரை தொடரும். இது ஆதி சண்டேஸ்வரரின் ஆணை.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

சாலியரும் கைக்கோளரும்

நெசவு என்ற தொழிலுக்கு சாலியர் என்ற பெயர் மட்டுமே பழங்கால கல்வெட்டுகளில் உள்ளது. 

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான கல்வெட்டுக்களில் கூட நெசவுத் தொழிலுடன் தொடர்புடையதாக கைக்கோளர் சமூகம் குறிப்பிடப்படவில்லை. 

சுந்தரபாண்டியனின் பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் இவர்கள் மீதான தறிஇறை (நெசவுத் தொழிலுக்கான வரி) குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நெசவுத் தொழிலுடன் இச்சமூகத்தைத் தொடர்புபடுத்தும் பழமையான கல்வெட்டாகும். இதுபோன்ற வரியுடன் கைக்கோளர்களைத் தொடர்பு படுத்தும் பதினான்காம் நூற்றாண்டுக் கல்வெட்டு சம்புவராயர் ஆட்சிக் காலத்தியதாகும்.

புதன், 3 மே, 2017

சத்திரப்பட்டியும் சாலியர்களும்

முன்குறிப்பு:-
சாலியர் முதலாக குடியேறிய பகுதி தெற்கில் ராமலிங்கபுரத்தை அடுத்து சமுசிகாபுரமே. அந்த காலகட்டத்தில் சத்திரப்பட்டி முதலில் உருவாகி இருக்கவில்லை.

கிபி 1600களின் இறுதி 1700களின் தொடக்கத்தில் மதுரையை தலைநகராக அமைத்து ராணி மங்கம்மாள் ஆட்சி செய்தார். அவர் பல சீர்திருத்தப் பணிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். அதில் ஒரு பகுதியாக சாலை அமைப்பு.

மதுரையில் ஆரம்பித்து கன்னியாகுமரி வரை மிக நீண்ட சாலையை நிறுவினார். அதே கால கட்டத்தில் மற்றொரு பிரிவாக சமுசிகாபுரத்தை கடந்து செல்லும் மங்கம்மாள் சாலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது இப்பொழுது இருக்கும் வன்னியம்பட்டி சாலை - ஸ்ரீவில்லிபுத்தூர் வரை.



சாலை அமைக்கையில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அந்தப் பகுதியின் பெருந்தலைக்கட்டு கொண்ட இனத் தலைவர் மூலம் பேசி பணி தொடர்ந்தார். அதே கால கட்டத்தில் தான் மேற்படி சாலையின் கிழக்கே சத்திரப்பட்டி வளர்ந்து வந்தது. (பெயர் கிடையாது)

சாலை அமைத்த ராணி, சாலையின் ஓரங்களில் கால்நடைகள் குடிக்க தண்ணீர் தொட்டிகளையும், கடந்து செல்லும் யாத்திரீகர்கள் இளைப்பாற சாத்திரங்களையும் அமைத்தார்.

அதில் ஒரு சத்திரம் மங்கம்மாள் சாலையின் ஓரம் அமைந்த ஊரில் அமைக்கப்பட்டது. பிறகு இதன் காரணம் கொண்டு சத்திரப்பட்டி என்ற பெயர் ஏற்பட்டது. மேற்படி சத்திரம் அந்த இடத்தின் பெரிய இனக்குழுவான சாலியர் பொறுப்பில் இருந்ததாம். அதற்கு முன் சமுசிகாபுரம் என்றுதான் அழைக்கப்பட்டது.

பொதுவாக ஊர் பெயர் அமைக்கும் போது காரணப் பெயர் கொண்டுதான் வைக்கப்படும். பாதுகாப்பு காவல் கொண்ட ஊர் என்றால் "புரம்". படை வீரர்கள் அல்லது வேட்டை சமூகம் வாழும் ஊர் "பாளையம்". மிகச் சிறிய ஊராயின் "பட்டி" என முடியும்.

சத்திரம் இருந்த சிறிய ஊர் சத்திரப்பட்டி. பிறகு காலப்போக்கில் சத்திரம் மறைந்து விட்டது.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சாலியர்களின் பட்டம்

முன்குறிப்பு :- நாம் பிராமணர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டு படியுங்கள்.




நண்பர்களே...நமது இனத்தின் வேர்கள் எங்கே இருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டியது உள்ளது. சொன்னால் கோவிச்சிக்கக் கூடாது.

நமது இனத்தவர்கள் சில பட்டங்களை கொண்டு அழைக்கப்படுகிறார்கள். நம்மில் பலரும் அதை விரும்புகிறோம் - கேவலம் என்று புரியாமலேயே..

மூப்பனார் :- மூப்பர் என்ற தமிழ் வேர்ச்சொல்லுக்கு முதியோர், மூத்தவர், காரணவர் என்ற அர்த்தத்தால் சொல்லப்படும். நமது இனம் இங்கே குடிபெயர்ந்து வந்த போது அந்தக் குழுவின் மூத்த குடி ஆள் மூப்பர் என அழைக்கப்பட்டார். பிறகு அதையே மரியாதையாக மூப்பனார் என மாறியது.

இயல்பாகவே நமக்கு ( சாலியருக்கு ) மூப்பனார் என்ற பட்டம் இருந்ததே இல்லை.
வேறு பட்டங்கள் இருந்தது. இருக்கிறது.

பண்ணாடி :- இதை நாம் சொல்லவே கூடாது. மற்றவர்கள் சொல்ல அனுமதிக்கவும் கூடாது. இது பெரும்பாலான முதலாளி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. பெரிய பண்ணை நிலங்கள் வைத்திருந்தவர்கள் பண்ணாடி என்று அழைக்கப்பட்டனர்.
அது நமக்குப் பெருமை அல்ல. முன்குறிப்பை மறுபடி ஒருமுறை படிக்கவும்.

சரி.... அப்படியானால் நமக்கான பட்டம்தான் என்ன ?
பெரிய புராணத்தில் நமக்கு "அறுவையர்" என்ற தொழில்சார்ந்த பட்டம் இருக்கிறது. என்றால் துணியை நெய்து அறுப்பது. "அடவியார்" என்றும் ஒரு பட்டம் உள்ளது. ஆந்திராவில் பத்ம பிராமணர்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே. மூப்பனார், பண்ணாடி என்பது நமக்கு பெருமை அல்ல. சொல்லப்போனால் பண்ணாடி என்பது நமக்கு சிறுமைதான்.