செவ்வாய், 4 அக்டோபர், 2016

நேச நாயனார்



காம்பீலி என்னும் வளமிக்க பூமியில் நேச நாயனார் பிறந்து வாழ்ந்து வந்தார். சிவனடியார்களுக்கு கோவணமும் , வேஷ்டியும் தானே நெய்து கொடுத்தார். சாலியரல்லவா...!


சிறிது சிறிதாக சிவ உபாசனை செய்து முற்பிறப்பும் அறிந்தார்.




ஹம்பியில் உள்ள விருபாக்ஷீஷ்வரரை உபாசித்து வழிபட்டு முக்தி அடைந்தார்.

காம்பீலி நகரம் இன்றைய கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹம்பிக்கு அருகில் உள்ளது.

பெல்லாரி போன்ற மாவட்டங்களில் இன்றளவும் பத்மசாலியர் வாழ்ந்து வருவது இதற்கு சான்றாகும்.

நமது மாயவரம் கொரநாட்டில் புணுகீஸ்வரர் ஆலயத்தில் இப்போதும் பங்குனி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் நேச நாயனாருக்கு நமது மக்களால் குருபூஜை கொடுக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நமது சாலிய மக்கள் வாழும் எல்லா ஊர்களிலும் இதே போன்ற வழிபாட்டை குருபூஜையின் போது கொண்டுவந்தால் இன்னும் நமது இனத்துக்கு கௌரவம்.

சனி, 24 செப்டம்பர், 2016

சாலியர், பத்மசாலியர் தோற்றம்

உலகத்தின் ஆதியில் பஹவான் நாராயணன் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இருக்கும் சமயத்தில் தன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து (தொப்புளில் இருந்து) பிரம்மதேவரை படைத்தார்.

பிரம்மதேவர் தனக்கு நிகரான ஒன்பது ரிஷிகளைப் படைத்தார். அவர்களுல் ஒருவர் பிருகு மஹரிஷி. இவரே பத்மசாலியர்களின் மூல புருஷர்.

பிருகு மகரிஷியின் மனைவி ஷாதினி. இவர்களுக்கு மூன்று புத்திரர்கள். அவர்கள் தாத்ரு, விதாத்ரு மற்றும் லக்ஷ்மி தேவி.

விதாத்ரு, நியதி என்பவரை மணந்தார். லக்ஷ்மிதேவி மஹாவிஷ்ணுவை மணந்தார். (தாத்ருவை பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை)

விதாத்ரு - நியதி தம்பதியினரின் மகனாக ம்ருகண்டு மஹரிஷி பிறந்தார். ம்ருகண்டு மஹரிஷி, முத்கல முனிவரின் மகளான மருத்துவதியை மணந்தார்.

ம்ருகண்டு - மருத்துவதி தம்பதியினருக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லை. பிறகு சிவபெருமானை நோக்கி தவமிருந்து மார்க்கண்டேய மஹரிஷி தோன்றினார்.

அல்பாயுளாக தோன்றிய மார்கண்டேயரை நோக்கி, உரிய காலத்தில் எமதர்மர் பாசக் கயிறை வீசினார். மார்க்கண்டேயர் ம்ருத்துஞ்சய மந்திரத்தை சொல்லி சிவலிங்கத்தை அணைத்துக் கொண்டார்.


சிவபெருமான் நேரில் தோன்றி, மார்கண்டேயருக்கு தீர்காயுள் வழங்கி "சிரஞ்சீவி ஆகு" என்று வரம் தந்தார்.

அந்த காலகட்டத்தில் காலபாசுரன் என்ற அசுரனின் தொந்தரவு அதிகரித்து வந்தது. இவனை அழிப்பதற்கு மார்கண்டேயரின் புதல்வரால் மட்டுமே முடியும் என்று யாகபுருஷன் மூலம் தெரியவந்தது.

மார்கண்டேயர் பிரம்மச்சாரி. உலக நன்மைக்காக திருமணம் செய்துகொள்ள ஒத்துக்கொண்டார். பின்னர் அக்னிதேவரின் மகளான பூம்ரவதியுடன் மார்கண்டேயருக்கு திருமணம் ஆயிற்று.

இவர்களின் மகனாக பாவனரிஷி தோன்றினார். இதே காலகட்டத்தில் பிரம்மா தனது படைப்பு தொழிலால் ஏராளமானவர்களை படைத்தார். தோன்றியவர்கள் அனைவரும் வஸ்திரத்துக்கு சிரமப்பட்டனர். நாராயணன் பாவனரிஷிக்கு வஸ்திரம் நெய்யும் கலையை போதித்தார். நாராயணர் பாவனரிஷிக்கு தனது நாபி கமலத்தில் உள்ள தாமரை தண்டினை கொடுத்து அதில் வரும் ஷாலியை {நூலால்} தேவாதி தேவர்களுக்கு வஸ்திரம் இழைக்க சொன்னார்

"உன்மூலமாக பிறப்பவர்கள் அனைவரும் என்னவரே... நீங்கள் உலகத்துக்கு வஸ்திரம் வழங்கி மானம் காப்பீர்கள்.பத்ம ஷாலியர் என்று அழைக்கப் படுவீர்கள்" என்று நாராயணன் வரமளித்தார்.
ஷாலி என்றால் நூல்.
பத்மத்தின் ஷாலி {நூலில் } இருந்து வஸ்திரம் இழைத்ததால் பத்மஷாலியர் எனப்பட்டனர்.

பாவனரிஷி சூரியதேவனின் மகளாகிய பத்ராவதியை மணந்தார். மார்கண்டேயர் சப்தரிஷி மண்டலத்தில் பிரகாஷமான நட்சத்திரமாக மின்னினார்.
மின்னிக் கொண்டிருக்கிறார். பதினெட்டு புராணங்களில் மார்கண்டேய புராணமும் ஒன்று. சிவனை நோக்கி தவம் செய்து சிவலோகம் சென்றார்.

பத்மசாலிய மூல புருஷரான பாவனரிஷி தேவர்களுக்கு வஸ்திரம் நெய்து கொடுத்தார்.

பாவன ரிஷி - பத்ராவதி தம்பதியினருக்கு 101 குழந்தைகள்.
அந்த நூற்றிஒருவர்களே பத்மசாலியர்களின் கோத்திர நாயகர்கள்.

பாவன ரிஷி நாராயணிடம் ஐக்கியமாகி பாவநாராயண் என்றழைக்கப்பட்டார்.

சனி, 17 செப்டம்பர், 2016

சாலிய செட்டியார்கள்




கண்டறியப்பட்ட கல்வெட்டு
**



மாயவரம் போன்ற பகுதிகளில் சாலியர்கள், சாலிய செட்டியார்கள் என்று அழைக்கப்படுவது நமக்குத் தெரிந்ததே. அதை மெய்பிக்கும் வகையிலான செய்தி.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு 20 கிமீட்டர் தூரத்தில் மேல்மலையனூர் என்ற ஊர் உள்ளது.  இங்குள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்த அம்மன்.
இங்கு திருப்பணிக்காக ஆராயும் போது பழங்கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.

கல்வேட்டின் எழுத்து அமைப்பில் ஸ்ரீ மன் மகா மண்டலேசுவரம் என்று எழுதப்பட்டிருப்பதால், இது  விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று ஆய்வில் தெரிய வந்தது.

இதுபற்றி கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறும்போது, "ஸ்ரீ வேங்கடபதி  மகாதேவராயர் (கி.பி.1582-1619) காலத்தில், வாணாதராய முதலியார் (கி. பி.1587-1597) வேட்டவலம் நிலப்பகுதியின் பாளையக்காரராக இருந்தார். இந்த  பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டின்கீழ் மேல்மலையனூரும் இருந்து வந்திருக்கிறது  என்பதை புதிய கல்வெட்டின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

வாணாதராய முதலியாரின் பிரதிநிதியாக எல்லப்பிள்ளை என்பவ்ர் நியமிக்கப்பட்டு இவ்வூரில் குடிமை, நெசவு சம்மந்தப்பட்ட வரிகள் வசூலிக்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு எடுத்துக்கூறுகிறது. வசூலிக்கப்பட்ட வருவாயில் ஒரு பகுதியை ஊரில் அமைந்துள்ள இளையநாயனார் (ஸ்ரீமுருகப்பெருமான்) வழிபாட்டுக்குச்  செலவிடப்பட்டுள்ளது. மலையனூரில் நெசவுத் தொழிலை நெசவுக் குடியான மும்மடி செட்டியார் மற்றும் சாலிய செட்டியார் ஆகிய பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் ஊரில் குடியிருப்பவர்களிடமும், நெசவுக்குடிகளிடமும், பாவுக்கும் முழுத்தறிக்கும் முறையே அரைப்பணம், முக்கால் பணம், ஒரு பணம் என வரி வசூலித்துள்ளனர். இந்தக் கல்வெட்டை சிதைத்தால் கங்கைக்கரையில் காராம் பசுவை (சினைப் பசு) கொன்ற பாவம் கிடைக்கும். கல்வெட்டை கொத்தியவன் கணக்கு எல்லப்பன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு இது.

கேரள சாலியர்கள்

கலிக்கோ துணி, கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து உருவானது. போர்த்துக்கீசியர்கள் இந்தத் துணிக்கு கலிக்கோ என்று பெயர் சூட்டினர். சாலியர்கள் எனப்படும் நெசவாளிகள் இந்

தத் துணியை நெய்துவந்தனர். இன்றும்கூட கேரளாவின் பேப்பூர் அருகே சாலியர் காலனி இருக்கிறது. அங்கு ஓடும் ஆறும் சாலியம் ஆறு என்றே அழைக்கப்படுகிறது. சாமுதிரின் அரசனால் இந்த நெசவாளிகள் கேரளாவில் குடியமர்த்தப்பட்டனர். இவர்களது பூர்வீகம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம். வலங்கை இடங்கை சண்டை ஏற்பட்டதில் இவர்கள் கேரளாவுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்படுகிறது.

அது என்ன வலங்கை இடங்கை சண்டை? சோழர்கள் காலத்தில் அந்தணர் மற்றும் வேளாளர் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் வலங்கை இடங்கை என இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுஇருந்தனர். 10-ம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர்களின் படைப் பிரிவில் இந்த வழக்கம் தோன்றியது. வலங்கைப் பிரிவில் 98 குலங்களும், இடங்கைப் பிரிவில் 98 குலங்களும் இருந்தன. வலங்கைப் பிரிவினர், மன்னர் படைகளில் சிறப்பிடம் பெற்றிருந்தனர். ஆனால், இடங்கையினர் பெரும்பாலும் சிறுவணிகர்களாகவும் தொழிலாளர்களாகவுமே இருந்தனர். இவர்​களிடையே பிரிவினைகள், மோதல்கள் இருந்தன. வலங்கை, இடங்கை வகுப்பின​ரிடையே ஏற்பட்டு இருந்த மோதல்கள் 19-ம் நூற்றாண்டில் கொலையிலும் கொள்ளை​யிலும் முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம், இரு வகுப்பினரும் அனுபவித்துவந்த உரிமை​களைப் பற்றியது. சென்னையில் சர் ஆர்ச்சிபால்ட் காம்ப்பெல் கவர்னராகப் பதவி ஏற்ற பிறகு வலங்கை, இடங்கைப் போராட்டங்கள் நிகழ்ந்தன. இடங்கையினர் அனைவரும் தொழிலாளர்கள். கிழக்​கிந்தியக் கம்பெனிக்கு அவர்களுடைய வணிகத்தில் உதவிசெய்து வந்தவர்கள்.

ஒரு சமயம், வலங்கையினர் எஸ்பிளனேட் மைதானத்தைக் கடந்து கோட்டைக்குச் சென்றபோது தப்பட்டை அடித்துக்கொண்டும், கரண்டிகளைத் தூக்கிக்கொண்டும், மணியடித்துக்கொண்டும் சென்றனர். அவ்வாறு செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை என, அதை எதிர்த்து இடங்கையினர் கவர்னரிடம் புகார் அளித்தனர். எஸ்பிளனேட் மைதானம் அனைவருக்கும் பொதுவானது. எனவே, அதில் உரிமைப் பிரச்னை ஏதும் கிடையாது என்று அரசாங்கம் உத்தரவு பிறப்பித்த பிறகுதான், பிரச்னை ஓய்ந்தது. கேரளாவுக்குச் சென்ற சாலியர்களிடமும்கூட, வலங்கை இடங்கை சண்டை நடந்து இருக்கின்றன என்பதை சாமுதிரின் குறிப்பேடுகள் கூறுகின்றன.

இதற்கிடையில், கோழிக்கோட்டில் இருந்து கலிக்கோ துணிகளை வாங்கி ஏற்றுமதி செய்துவந்த போர்த்துக்​கீசியர்கள், தாங்களே பருத்தி விளைவிப்பது என்று முடிவு செய்தனர். பிரேசிலில் பருத்தி பயிரிடுவதற்கு
முயன்றனர். அத்துடன், கோழிக்கோட்டில் இருந்த சாலியர்கள் சிலரை தங்களுடன் கப்பலில் அழைத்துச் சென்று பிரேசிலில் குடியமர்த்தி அங்கே இந்திய நெசவுக் கலையை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

செப்பு பட்டயத்தில் சாலியர் வரலாறு

சமீபத்தில் சுமார் 400ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கல்லுப்பட்டி அருகில் உள்ள மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் கிடைத்துள்ளது.மேற்படி பட்டயம் மதுரை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.           

இது குறித்த தினமணி பத்திரிகை செய்தி .-
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மேலத் திருமாணிக்கம் கிராமத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப் பட்டயத்தில், சாலியர் குலத்தவரின் வழிபாடு குறித்த தகவல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலத்திருமாணிக்கத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது மூதாதையரால் பாதுகாத்து வரப்பட்ட இந்த செப்புப் பட்டயத்தை, மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியரிடம் கொடுத்து, அதிலுள்ள விவரங்களைக் கூறுமாறு கேட்டுள்ளார்.

அந்த செப்புப் பட்டயம், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பேரையூர் அருகே உள்ள அழகியநல்லூரில் சாலியர் குலத்தைச் சேர்ந்தவர்களின் குல தெய்வமான அரிய மாணிக்கவல்லி கோவில் வழிபாடு குறித்து செப்பேடு குறிப்பிடுகிறது என்று அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் அ. பெரியசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இந்த கோவில், சதுரகிரி மலையின் வடபுறம் உள்ள ஆற்றங்கரையில் சேரர்களின் கோவிலான திருமாணிக்க சுந்தரேசுவரர் கோவிலுக்கு வடபுறம் உள்ளதாகச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அரிய மாணிக்கவல்லி கோவில் நிர்வாகியான சைவ குலத்தைச் சேர்ந்த பஞ்சாட்சர தேசிகருக்கு, இப் பட்டயம் எழுதி அளிக்கப்பட்டுள்ளது. இப் பட்டயத்தை மதுரை சொக்கலிங்க பட்டர் மகன் முத்துக்குமாரசாமி பட்டர் எழுதியுள்ளார்.

சாலியர் இன மக்களின் முன்கதை இப் பட்டயத்தில் சொல்லப்பட்டுள்ளது. பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தில் வசித்த சாலியர்கள், அங்கு ராஜவம்சத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அங்கிருந்து குடிபெயர்ந்த சிலர் பாண்டிய நாடான மதுரையில் குடியேறியதாகவும், அவர்களுக்கு பாண்டிய மன்னன் ஆதரவளித்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அழகியநல்லூரில் குடியிருக்க அனுமதி அளித்ததாகவும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், புத்தூர், ராஜபாளையம், சுந்தரபாண்டியம், சத்திரப்பட்டி, அருப்புக்கோட்டை, சக்கம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த சாலிய இனத்தவர்கள் 44 பேர் அரிய மாணிக்கவல்லி தாயாரின் வழிபாடு முறை குறித்து முடிவு செய்து கையொப்பமிட்டிருப்பதை செப்புப் பட்டயம் தெரிவிக்கிறது.

சாலியர்களின் குல தெய்வமான அரிய மாணிக்கவல்லிக்கு தினசரி பூஜைகள், ஆண்டு திருவிழா, சிவனிசைக் கட்டளை, ஆனி மாதக் கட்டளை ஆகியவற்றுக்கு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 2 கலிப்பணம், அம்மனுக்கு பூஜை செய்ய குடும்பத்துக்கு தலா ஒரு கலிப்பணமும் வழங்க வேண்டும்.

மேலும், மேற்குறிப்பிட்ட 7 ஊர்களைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றுக்கு 15 பொன் வசூலித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு கொடிப் பரிவட்டம், திருமணப் பட்டு, சதுரகிரி சிவலிங்கத்துக்கு நவராத்திரி கட்டளை செய்ய வேண்டும் என்பதையும் பட்டயம் குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை, சிதம்பரம், கழுகுமலை, மதுரையைச் சேர்ந்த நான்கு மடாதிபதிகள் இந்தக் கட்டளைகளை நடத்தித் தர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலியர் இன மக்களுக்கு எழுதப்பட்ட இந்த செப்பேடு தமிழக வரலாற்றுக்குப் பல புதிய செய்திகளைத் தந்துள்ளது என்றார்

சனி, 20 ஜூன், 2015

சாலியர் சத்திரம்

சாலியர்கள் பல் ஊர்களில் சத்திரம் வைத்திருக்கிறார்கள் .அவற்றின் சில தொலைபேசி எண்கள் ------
மதுரை --0452 2340218
திருப்பரங்குன்றம் ---0452 2485100
பழனி ---04545 244753
திருச்செந்தூர் --04639 246930
சென்னை --044 24803127
     மக்கள் பயனுக்காக .

புதன், 22 ஜனவரி, 2014

சாலியர் வரலாறு 8

சமீபத்தில் சுமார் 400ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புப்பட்டயம் ஒன்று கல்லுப்பட்டி அருகில் உள்ள மேலத்திருமாணிக்கம் என்ற ஊரில் கிடைத்துள்ளது.மேற்படி பட்டயம் மதுரை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.           

இது குறித்த தினமணி பத்திரிகை செய்தி .-----                                                               மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள மேலத் திருமாணிக்கம் கிராமத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப் பட்டயத்தில், சாலியர் குலத்தவரின் வழிபாடு குறித்த தகவல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலத்திருமாணிக்கத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது மூதாதையரால் பாதுகாத்து வரப்பட்ட இந்த செப்புப் பட்டயத்தை, மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியரிடம் கொடுத்து, அதிலுள்ள விவரங்களைக் கூறுமாறு கேட்டுள்ளார்.

அந்த செப்புப் பட்டயம், 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பேரையூர் அருகே உள்ள அழகியநல்லூரில் சாலியர் குலத்தைச் சேர்ந்தவர்களின் குல தெய்வமான அரிய மாணிக்கவல்லி கோவில் வழிபாடு குறித்து செப்பேடு குறிப்பிடுகிறது என்று அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் அ. பெரியசாமி கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியது:

இந்த கோவில், சதுரகிரி மலையின் வடபுறம் உள்ள ஆற்றங்கரையில் சேரர்களின் கோவிலான திருமாணிக்க சுந்தரேசுவரர் கோவிலுக்கு வடபுறம் உள்ளதாகச் செப்பேடு குறிப்பிடுகிறது.

அரிய மாணிக்கவல்லி கோவில் நிர்வாகியான சைவ குலத்தைச் சேர்ந்த பஞ்சாட்சர தேசிகருக்கு, இப் பட்டயம் எழுதி அளிக்கப்பட்டுள்ளது. இப் பட்டயத்தை மதுரை சொக்கலிங்க பட்டர் மகன் முத்துக்குமாரசாமி பட்டர் எழுதியுள்ளார்.

சாலியர் இன மக்களின் முன்கதை இப் பட்டயத்தில் சொல்லப்பட்டுள்ளது. பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சிபுரத்தில் வசித்த சாலியர்கள், அங்கு ராஜவம்சத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அங்கிருந்து குடிபெயர்ந்த சிலர் பாண்டிய நாடான மதுரையில் குடியேறியதாகவும், அவர்களுக்கு பாண்டிய மன்னன் ஆதரவளித்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அழகியநல்லூரில் குடியிருக்க அனுமதி அளித்ததாகவும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், புத்தூர், ராஜபாளையம், சுந்தரபாண்டியம், சத்திரப்பட்டி, அருப்புக்கோட்டை, சக்கம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த சாலிய இனத்தவர்கள் 44 பேர் அரிய மாணிக்கவல்லி தாயாரின் வழிபாடு முறை குறித்து முடிவு செய்து கையொப்பமிட்டிருப்பதை செப்புப் பட்டயம் தெரிவிக்கிறது.

சாலியர்களின் குல தெய்வமான அரிய மாணிக்கவல்லிக்கு தினசரி பூஜைகள், ஆண்டு திருவிழா, சிவனிசைக் கட்டளை, ஆனி மாதக் கட்டளை ஆகியவற்றுக்கு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 2 கலிப்பணம், அம்மனுக்கு பூஜை செய்ய குடும்பத்துக்கு தலா ஒரு கலிப்பணமும் வழங்க வேண்டும்.

மேலும், மேற்குறிப்பிட்ட 7 ஊர்களைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றுக்கு 15 பொன் வசூலித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு கொடிப் பரிவட்டம், திருமணப் பட்டு, சதுரகிரி சிவலிங்கத்துக்கு நவராத்திரி கட்டளை செய்ய வேண்டும் என்பதையும் பட்டயம் குறிப்பிடுகிறது.

திருவண்ணாமலை, சிதம்பரம், கழுகுமலை, மதுரையைச் சேர்ந்த நான்கு மடாதிபதிகள் இந்தக் கட்டளைகளை நடத்தித் தர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பட்டயத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலியர் இன மக்களுக்கு எழுதப்பட்ட இந்த செப்பேடு தமிழக வரலாற்றுக்குப் பல புதிய செய்திகளைத் தந்துள்ளது என்றார்.