சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள செப்பேட்டில் காஞ்சிபுரத்தை ஆண்ட சோழ மன்னர்களில் உத்தம சோழன் என்ற பரகேசரிவர்மன் உத்தம சோழர் (கிபி 971 ல்) எழுதிக்கொடுத்த செப்பு பட்டயத்தில் முதல் பத்து வரிகள் சமஸ்கிருதத்திலும், அடுத்த 110 வரிகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன.
செப்பேட்டில் உள்ள சமஸ்கிருத பகுதி தெரிவிப்பதாவது :- கச்சிப்பேடு(காஞ்சிபுரம்) நகரில் சில பகுதிகளான கருவூலம்பாடி, கம்சகப்பாடி, ஆதிமனப்பாடி, மற்றும் எருவலச்சேரி என்ற இடங்களில் வாழும் பட்டு சாலியர் நெசவாளர்கள் 200 தங்க காசுகளை அரசரிடம் வைப்பு நிதியாக வைத்துள்ளனர்.
இவற்றில் இரண்டு பகுதிகளில் வாழும் நெசவாளர்களை உத்தம சோழன் , கோவில் மேலாளராக நியமித்துள்ளார். மேலும் மதுரையைப் வென்ற இந்தச் சோழ மன்னர் சோழனியாமம் என்ற பகுதியில் உள்ள மக்கள், ஊரகம் கோவிலுக்கு குறிப்பிட்ட அளவு அரிசியும் , எண்ணெயும் ஆண்டுதோறும் தரும்படி கட்டளையிட்டுள்ளார் . இதனால் சோழனியாமம் மக்கள் உட்பட கோவிலில் மேலாளராக பணி புரியும் நெசவாளர்களும் ஊரகம் கோவிலில் கணக்குகளை முறைப்படி எழுதி மேற்பார்வை செய்ய வேண்டும்."
இந்த செப்பேட்டில் கண்டபடி பட்டு சாலியன் நெசவாளர்கள் மன்னனிடம் பெற்றிருந்த மரியாதையும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து உடையவர்களாக இருந்தனர் என்றும் தெரியவருகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நாம் காஞ்சிபுரத்தில் இருந்து வந்ததற்கு வலுவான ஆதாரமாகவும் இது இருக்கிறது.
இன்னும் சில விஷயங்கள் சொல்ல வேண்டியுள்ளது.....