வியாழன், 10 நவம்பர், 2016

காசர்கோடு சாலியர்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள "அஞ்சூட்டம்பலம் வீரக்காவு" ( அம்பலம் =கோவில்) என்ற ஆலயத்தில் நம் சாலியர் இனத்தவரால் சித்திரை பூரம் திருவிழா கொண்டாடப் படுகின்றது.

கண்ணூர்



கேரளாவின் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் மட்டும் சாலியர்களுக்கு சொந்தமான 22 கோவில்கள் .

மக்கள் தொகை

ஆந்திரா, தெலுங்கானா இணைந்திருந்த போது நமது பத்மசாலியர் தான் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட ஜாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நமது மக்கள் தொகை சுமார் #ஒரு_கோடியே_இருபது_லட்சம்.

வியாழன், 3 நவம்பர், 2016

தெரிய வேண்டிய விஷயங்கள் 2



#பாஷை

நாம் வடக்கில் நிறைந்து வாழ்ந்தவர்கள். உத்திரப் பிரதேசம், பீகார், பஞ்சாப் போன்ற இடங்களில். அப்படியானால் நமது தாய் பாஷை ஹிந்தியா ? அல்லது பஞ்சாபியா ?

பிறகு குஜராத்தில் உள்ள சௌராஷ்ட்ர பகுதிகளில் குடியேறினோம். அப்படியானால் நமது பாஷை குஜராத்தி அல்லது சௌராஷ்ட்டிரமா ?
நிற்க. சௌராஷ்ட்ர இனத்தில் இப்போதும் #சாலிய_மஹரிஷி கோத்திரம் உண்டு.

பிறகு தென்னிந்தியாவில் குடியேறினோம். அங்குள்ள தெலுங்கு, மலையாளம், கன்னடம் தமிழ் போன்றவற்றை கற்றுக் கொண்டோம்.

சரி, பிறகு எதைத்தான் நமது தாய்மொழியாக ஏற்பது.

இருக்கிறது. பல மொழிகளில் பேசுபவராக இருப்பினும், நாம் கடைசியாக தாய்மொழியாக கொண்டது #தெலுங்கு தான். (நினைவிருக்கிறதா ? பத்மாவதி தாயார் பற்றிய நமது பதிவு)

நான் விசாரித்து தெரிந்து கொண்ட வகையில் எல்லோருமே ஒரே கருத்தாக தெரிவிப்பது நான் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதே.

இன்னொரு மூத்த அறிஞர் ஒருவர் சொல்லும் போது "பூணூலும், தெலுங்கும் சாலியருக்கு எப்பொழுதும் சாஸ்வதமானது" என்று உறுதிபடத் தெரிவித்தார். அவர் பெரிய அறிஞரும் கூட.

#பின்குறிப்பு:- தமிழுணர்வாளர்கள் என்னை மன்னிக்கவும். எனக்கும் தெலுங்கு தெரியாது. தாய்மொழி தமிழ்தான்.

தெரிய வேண்டிய விஷயங்கள் 1

#தெரிய_வேண்டிய_விஷயங்கள்_1

ஒவ்வொன்றாக பேசுவோம்....

1. சாலியர்கள் அரை பிராமணர்கள் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். அல்லது தெரியாமலிருக்கலாம்.

ஆம். நாம் பாதி பிராமணரே.... அதென்ன பாதி ? வேதம் கற்று ஓத வேண்டும் என்ற கண்டிசன் மட்டும் கிடையாது. எனவே பாதி.

நாம் 3 அல்லது 4 தலைமுறைக்கும் முன் பூணூல் அணிபவர்கள் தெரியுமா ? இப்போதும் சிலர், சில இடங்களில் அணிந்துள்ளார்கள்.

ஏன் அந்தப் பழக்கம் நம்மிடம் விட்டுப்போனது என்பதை அறிவோம். பூணூல் அணிந்த காலத்தில் முன் மண்டையை மழித்து , பின்னால் குடுமி வைக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு ஊர் விசாரணை உண்டு.

பிறகு சினிமா தாக்கம் வந்ததும் குடுமி போய் கிராப் வந்தது. அடுத்து சந்தியா வந்தனம் போன்ற பழக்கம் மறைந்தது.

நாம் சுத்த சைவர்கள். ஆனால் , அசைவ பழக்கமும் ஏற்பட்டது.

#பூணூலும் _போய்விட்டது.

சரி,... இதை மீண்டும் பெற முடியாதா ?
பிராமணராக மாற முடியாதா என்றால் #முடியும் என்பதே பதில்.
அதற்கு சில கண்டிசன்கள் உள்ளது.

கேரள சாலியர்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள "அஞ்சூட்டம்பலம் வீரக்காவு" ( அம்பலம் =கோவில்) என்ற ஆலயத்தில் நம் சாலியர் இனத்தவரால் சித்திரை பூரம் திருவிழா கொண்டாடப் படுகின்றது.

கேரள சாலியர்

கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டம், நீலேஸ்வரம் பேரூராட்சியில் உள்ள "அஞ்சூட்டம்பலம் வீரக்காவு" ( அம்பலம் =கோவில்) என்ற ஆலயத்தில் நம் சாலியர் இனத்தவரால் சித்திரை பூரம் திருவிழா கொண்டாடப் படுகின்றது.